Asianet News TamilAsianet News Tamil

விவாகரத்தான இளம் பெண்ணுடன் உல்லாசம் ... உல்லாசமாக இருக்கும் பொது வீடியோ... கோவை இளைஞனின் அஜால் குஜால் சீக்ரெட்ஸ்!!

வாலிபர் ஒருவர் விவாகரத்தான பொள்ளாச்சி  இளம் பெண்ணை கல்யாணம் செய்துகொள்வதாக  உல்லாசம் அனுபவித்து ரூ.56 லட்சம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

pollachi young girl made a nude video take
Author
Coimbatore, First Published Jul 17, 2019, 5:58 PM IST

வாலிபர் ஒருவர் விவாகரத்தான பொள்ளாச்சி  இளம் பெண்ணை கல்யாணம் செய்துகொள்வதாக  உல்லாசம் அனுபவித்து ரூ.56 லட்சம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த திருமணமாகி விவாகரத்து பெற்ற 37 வயது இளம்பெண் மீரா தற்போது சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஆன் லைன் மூலம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அளித்துள்ள புகாரில்; கடந்த 9 வருடங்களுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. எங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எனது கணவரிடம் இருந்து கடந்த 4 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றேன். இதனையடுத்து சென்னையில் தங்கி இருந்து கிண்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். அங்கு எனக்கு எங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்த கோவை ஜி.டி. நாயுடு வீதியை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரது மகன் கிஷோர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. என்னை திருமணம் செய்வதாக கிஷோர் உறுதியளித்தார்.

நானும் அவரை நம்பி சகஜமாக பழகினேன். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட  அவர் என்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்தார். அதுமட்டுமல்ல நாங்கள் நான் உடை இல்லாமல் நிர்வாணமாக இருந்த சமயத்திலும், உல்லாசமாக இருந்த இருப்பதையும் வீடியோ மற்றும் போட்டோக்களை அவரது மொபைல் போனில் எனக்கு தெரியாமல் பதிவு செய்து வைத்தார். பலமுறை என்னை ஆசை வார்த்தை கூறி கூறி உல்லாசமாக இருந்த கிஷோர் தற்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்.

மேலும் நான் தொடர்ந்து வலியுறுத்தினால் என்னுடைய ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி என்னிடம் ரூ.56 லட்சம் கொண்டார். அதுமட்டுமில்லாமல் மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரிடம் உள்ள என்னுடைய போட்டோக்களை மற்றும் வீடியோக்களை பறிமுதல் செய்து அதனை அழிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.

இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய கிஷோர் மீது கற்பழிப்பு, மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த சம்பவம் சென்னையில் நடந்ததால் இந்த வழக்கை கிண்டி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப் பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios