Asianet News TamilAsianet News Tamil

அடச்சீ.. பெண்கள் முன்னிலையில் நிர்வாணமாக நின்று போலீஸ்காரர் அட்டூழியம்.. சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ..

காவலருக்கு மதிப்பளித்து மதுபோதையில் இருப்பவருடன் மோதலை தவிர்க்கும் விதமாக, வியாபாரி முருகேசன் பிரச்சனை வேண்டாம் என எண்ணி அங்கிருந்து கிளம்பி விட்டதாக தெரிகிறது. முருகேசன் இல்லாததை அறிந்த காவலர் கிருஷ்ணகுமார், முருகேசனின் வீட்டின் முன்பு சென்று அவரது மனைவியை தகாத வார்த்தைகளால்  திட்டி மீண்டும் சண்டையிட்டார்.

Police presence atrocity by standing naked in front of women .. Video goes viral on social Media ..
Author
Chennai, First Published Sep 21, 2021, 9:54 AM IST

மதுபோதையில் பெண்கள் முன்னிலையில்  நிர்வாணமாக நின்று தலைமைக் காவலர் அட்டூழியம் செய்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழக காவல்துறையின் வரலாறு நீண்ட நெடியது, இந்தியாவின் மிகப்பெரிய காவல்துறைகளில் தமிழக காவல்துறையும் ஒன்று, தேசிய அளவில் தமிழக காவல்துறை 5வது இடத்தில் உள்ளது. உலகில் ஸ்காட்லாந்து யார்ட போலீசுக்கு நிகராக  ஒரு காவல்துறை உண்டு என்றால், அது தமிழக காவல்துறைதான் என்று மெச்சும் அளவிற்கு கண்ணியத்துடனும், கௌரவத்துடனும் பீடுநடை போடுகிறது தமிழக காவல்துறை, இப்படிப்பட்ட ஒரு காவல்துறையை அதில் பணியாற்றும் சில அதிகாரிகள் மற்றும் காவலர்கள் செய்யும் கீழ்த்தரமான செயல்கள் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவமானத்தையும், தலைகுனிவை தேடித்தந்துவிடுகிறது என்பது தான் வேதனை. 

Police presence atrocity by standing naked in front of women .. Video goes viral on social Media ..

இந்த வரிசையில் சென்னை அம்பத்தூரில் காவல்நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் ஒருவர் காவல்துறையில் கண்ணியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் பொதுமக்கள் மத்தியில் இழிவாக செயல்பட்டுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது. சென்னையை அடுத்த அம்பத்தூரில் தலைமை காவலர் ஒருவர் குடிபோதையில் நிர்வாணமாக அக்கம்பக்கத்தினருடன் சண்டையிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஒரகடம் ஏ.கே பெரியார் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். கோயம்பேடு போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். கிருஷ்ணகுமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரியான முருகேசன் என்பவருக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக பிரச்சினை எழுந்தது.

Police presence atrocity by standing naked in front of women .. Video goes viral on social Media ..

காவலருக்கு மதிப்பளித்து மதுபோதையில் இருப்பவருடன் மோதலை தவிர்க்கும் விதமாக, வியாபாரி முருகேசன் பிரச்சனை வேண்டாம் என எண்ணி அங்கிருந்து கிளம்பி விட்டதாக தெரிகிறது. முருகேசன் இல்லாததை அறிந்த காவலர் கிருஷ்ணகுமார், முருகேசனின் வீட்டின் முன்பு சென்று அவரது மனைவியை தகாத வார்த்தைகளால்  திட்டி மீண்டும் சண்டையிட்டார். இதனால் அக்கம்பக்கத்தினர் கிருஷ்ண குமாரை கண்டித்தனர். அதில் ஆத்திரமடைந்த காவலர் கிருஷ்ணகுமார் தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்றுகொண்டு அனைவரும் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொண்டார். இந்நிலையில் முருகேசனின் குடும்பத்தினர் அம்பத்தூர் காவல்  இணை ஆணையர் அலுவலகத்தில் தலைமை காவலர்  மீது புகார் அளித்துள்ளனர். ஒரு தலைமை காவலர் பெண்கள் இருக்கும் இடத்தில் நிர்வாணமாக அராஜகத்தில் ஈடுபட்டு இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios