Asianet News TamilAsianet News Tamil

மும்பை அழகியை வரவழைத்து உல்லாசம்.. காரியம் முடிந்ததும் இளைஞர்கள் செய்த பகீர் சம்பவம்..!

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஆன்லைன் செயலி மூலம் மும்பையில் உள்ள அழகி ஒருவரை தொடர்பு கொண்டு, தனிமையில் இருக்க அழைத்துள்ளார். அப்போது, அந்தப் பெண் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வருகிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பி மும்பையில் இருந்து இளம்பெண் மாமல்லபுரம் வந்துள்ளார். அவரை சந்தித்த ராஜேஷ், அங்கு அறை எடுத்து இருவரும் உல்லாசமாக ஈடுபட்டுள்ளனர்.

Online active call ... Mumbai girl from Mamallapuram ... youth Arrested
Author
Chennai, First Published Apr 28, 2022, 2:20 PM IST

சென்னை மாமல்லபுரத்தில் மும்பையில் இருந்து இளம்பெண்ணை வரவழைத்து உல்லாசம் அனுபவித்த இளைஞர்கள் கத்தியை காட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆன்லைன் செயலி

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஆன்லைன் செயலி மூலம் மும்பையில் உள்ள அழகி ஒருவரை தொடர்பு கொண்டு, தனிமையில் இருக்க அழைத்துள்ளார். அப்போது, அந்தப் பெண் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வருகிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பி மும்பையில் இருந்து இளம்பெண் மாமல்லபுரம் வந்துள்ளார். அவரை சந்தித்த ராஜேஷ், அங்கு அறை எடுத்து இருவரும் உல்லாசமாக ஈடுபட்டுள்ளனர்.

Online active call ... Mumbai girl from Mamallapuram ... youth Arrested

உல்லாசம்

இதன் பின்னர் தனது நண்பர்கள் தினதயாளன், விஸ்வநாதன் ஆகியோரை வரவழைத்துள்ளார் ராஜேஷ். அவர்களிடம் தனிமையில் இருக்க இளம்பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளார் ராஜேஷ். இதன் பின்னர், அந்த பெண் மும்பைக்கு செல்ல முடிவு செய்ததோடு, பேசியபடி 20 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். ஆனால், அந்த வாலிபர்கள் 3 பேரும் சேர்ந்து அந்தப் பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளனர்.

Online active call ... Mumbai girl from Mamallapuram ... youth Arrested

3 பேர் கைது

இதனால் செய்வதறியாது திகைத்துப்போன இளம்பெண், தனக்கு நடந்த சோகக்கதையை குறித்து மாமல்லபுரம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட காவல் துறையினர், தலைமறைவாக இருந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தினதயாளன், விஸ்வநாதன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், செல்போன் மற்றும் பணத்தை மீட்டு பெண்ணை எச்சரித்து மும்பைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க;- ரூ.5000 கொடுத்தால் போதும் இளம்பெண்களுடன் குஜாலாக இருக்கலாம்.. அழகிகளை வைத்து விபச்சாரம்.. சிக்கியது எப்படி?

Follow Us:
Download App:
  • android
  • ios