Asianet News TamilAsianet News Tamil

71 வயது மூதாட்டி அடித்துக்கொலை… ஆவடி அருகே அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!!

ஆவடி அருகே 71 வயது மூதாட்டியை அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

old women murdered by unknown person at avadi
Author
First Published Oct 4, 2022, 7:10 PM IST

ஆவடி அருகே 71 வயது மூதாட்டியை அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அருகே உள்ள கோவர்த்தனகிரி பொதிகை நகரை சேர்ந்தவர் சாவித்திரி. 71 வயதான இவரின் கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 3 மகன்கள் இருந்தனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இதை அடுத்து சாவித்திரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் இவருக்கு சொந்தமான மூன்று வீடுகளையும் வாடகைக்கு விட்டுள்ளார்.

இதையும் படிங்க: நீ என்னோடு உல்லாசமா இருக்க வரல.. உங்க அம்மா அப்பாவை கொலை பண்ணிடுவேன்.. இறுதியின் கள்ளக்காதலன் செய்த பகீர்

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாட்டியான சாவித்திரியை காண சென்ற பேரன் தனது பாட்டி சாவித்திரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுக்குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார் அங்கு கொள்ளை சம்பவம் ஏதும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்தனர்.

இதையும் படிங்க: கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கம்..! காவல்துறை அதிரடி நடவடிக்கை

அவரது வீட்டில் இருந்த பணமும், மூதாட்டி அணிந்திருந்த நகைகளும் அப்படியே இருந்துள்ளது. மேலும் மர்ம நபர்கள் மூதாட்டியை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மூதாட்டி வீட்டிற்கு வந்து சென்றவர்கள் யார் என்பதும் அவரை எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios