Asianet News TamilAsianet News Tamil

சிகிச்சைக்கு வந்த பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்த நர்ஸ்... கில்மா போட்டோ,வீடியோக்களோடு வந்த முதல் காதலன்!!

குமரி மாவட்டத்தில் நர்ஸ் ஒருவர், சிகிச்சைக்கு வரும் வாலிபர்களை காதல் வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து வந்த்துள்ள சம்பவம் பகிரங்கமாகியுள்ளது.

nurse romance with young boy
Author
Chennai, First Published Jan 31, 2019, 12:10 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் . கடந்த ஒருவருடத்துக்கு முன்பு விபத்தில் சிக்கினார். அவரை திருவட்டாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அங்கு திருவட்டாரை அடுத்துள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்த சத்தியா  என்பவர் நர்சாக பணியாற்றினார். முதல் பார்வையிலேயே தினேஷுக்கு,  சத்தியாவுக்கும் காதல் வயப்பட்டனர். சிகிச்சை முடிந்து திரும்பும்போது  போன் நம்பர், வீட்டு முகவரியை இருவரும் பரிமாறிக்கொண்டனர். பின்னர் நீண்ட நேரம் செல்போனில் பேசி காதலை வளர்த்தனர். நாளடைவில் அவர்களின் நெருக்கம் அதிகமானது. 

இதனால் இருவரும் தனியாக வெளியே சுற்றத்தொடங்கினர். அதோடு அருணின் வீட்டுக்கு செல்லும் சத்தியா அவரின் தந்தையுடனும் பேசியுள்ளார். தினேஷின் தந்தையும் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தார். கல்யாண பேச்சு எடுத்ததால், சத்தியா திடீரென தினேஷுடன்  பேசுவதை நிறுத்திக்கொண்டார். தினேஷ் போனில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் தான் பிசியாக இருப்பதாக சொன்னாராம். ஒரு கட்டத்தில் செல்போனை ஆப்  செய்துவிட்டு, வேலையை விட்டுவிட்டாராம்.

அதன் பிறகு தினேஷ் அழைத்தாலும் செல்போனை எடுப்பது இல்லை. காதலி தன்னுடன் பேச மறுப்பதை தெரிந்து கொண்ட தினேஷ் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகினார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தினேஷ்ன் வாட்ஸ் அப்க்கு ஏராளமான போட்டோகள் வந்தன. அந்த போட்டோக்கள் அனைத்தும் சத்தியா ஒரு ஆணுடன் தனி அறையில் உல்லாசம் அனுபவிக்கும் போட்டோகளும் நிர்வாணக் கோலத்தில் இருப்பது போலவும் இருந்ததாம். அதுமட்டுமல்ல சத்தியா தாலியும் அணிந்து இருந்தார். இன்னொரு போட்டோவில் ஆண் ஒருவரின் சட்டையையும் அணிந்து இருந்தாராம். இன்னும் சில போட்டோக்களில் வாலிபர் ஒருவர் சட்டை அணியாமல் சத்தியா இறுக்கமாக கட்டி அணைத்தபடி, முத்தமிட்டும் நிற்கிறார்.  வேறு போட்டோவில் தாலியை கட்டிலில் கழற்றி வைத்து அருகில் இருக்கின்றார். இப்படி டிசைன் டிசைனாக படு கிளுகிளுப்பாகவும் இருந்ததாம்.

நான் இவரை திருமணம் செய்துகொண்டேன். ஆகவே இனிமேல் டிஸ்டப் வேண்டாம் என்று வாய்ஸ் மெசேஜூம் அனுப்பி இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ் உடனே சத்தியாவை தொடர்பு கொண்டு, இதே போல் நாம் இருவரும் சேர்ந்து எடுத்த பல கிளுகிளுப்பான போட்டோக்கள் என்னிடமும் உள்ளன என கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சத்தியா , அருண் தன்னை மிரட்டுவதாக அவருடன் இருக்கும் வாலிபரிடம் கூறியுள்ளார். சத்தியாவின் 2வது காதலன் கபில் தேவிடம் (பெயர் மாற்றம்). 

திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் பணியாளராக உள்ளார். இவரும் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த போதுதான் சத்தியாவிடம் காதல் வலையில் விழுந்து இருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே 2வது காதலனின் அறிவுறுத்தல் படி, முதல் காதலன் தினேஷ் தன்னை மிரட்டுவதாக சத்தியா போலீசில் புகார் அளித்தார். பெண் பிரச்னை என்பதால் போலீசாரும் இந்த புகாருக்கு முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்க தொடங்கினர்.  

இதனைத் தொடர்ந்து ஸ்டேஷனுக்கு வந்த தினேஷ் சத்தியா தன்னுடன் நெருக்கமாக இருந்த போது எடுத்த படங்கள் மற்றும் ஒரு வருடமாக வீடியோ காலில் பேசியவற்றையெல்லாம் போட்டு காட்டினாராம். உண்மையாக காலித்த தன்னை சத்தியா ஏமாற்றி விட்டு வேறு ஒருவருடன் சுற்றுவதாகவும், தன்னிடம் இருந்து ஏராளமான பணம் மற்றும் பொருட்களை வாங்கியுள்ளதாகவும் தினேஷ் கூறினார். இதையடுத்து தினேஷ்  மற்றும் சத்தியா, அவரது தாய் ஆகியோரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். சத்தியாவின் தாய், தனது மகள் மிகவும் நல்லவள். தினேஷ் தான் சத்தியாவை மிரட்டுகிறார் என போலீசாரிடம் கூறினார். 

இதையடுத்து போலீசார் அவரது தாயாரிடம் தனியாக விசாரித்தனர். அப்போது மகளின் முதல் மற்றும் 2வது காதலர் குறித்த விவரம், இருவருடனும் எடுத்த போட்டோக்கள் என மொத்தமாக ஒத்துக்க கொண்டாராம். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் அழுதுக்கொண்டே வெளியே சென்றார். பின்னர் இருவரையும் அழைத்து அவர்களின் செல்போன்களில் இருந்த கில்மா போட்டோக்களை டெலிட் செய்தனர். இதுபோல் இனிமேல் எந்த புகைப்படமும் வெளியே வரக்கூடாது என கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். காதல் தோல்வியால் மனம் உடைந்த தினேஷ் மிகுந்த சோகமுடன் டாஸ்மாக் சென்றாராம்.  

Follow Us:
Download App:
  • android
  • ios