புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாலிபர் வெட்டிப்படுகொலை... நெல்லிக்குப்பத்தில் பதற்றம்..!
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மேல்பாதி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (28) கூலி தொழிலாளி. இவரது மனைவி சவுமியா (26). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அம்பேத்கார் நகரை சேர்ந்தவர்களுக்கும், மேல்பாதி காலணியை சேர்ந்தவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அங்குள்ள இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாடினார்கள். அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கினர்.
கடலூர் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மேல்பாதி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (28) கூலி தொழிலாளி. இவரது மனைவி சவுமியா (26). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அம்பேத்கார் நகரை சேர்ந்தவர்களுக்கும், மேல்பாதி காலணியை சேர்ந்தவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அங்குள்ள இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாடினார்கள். அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கினர்.
அப்போது அம்பேத்கார் நகரை சேர்ந்தவர்களுக்கும் மேல்பாதி காலணியை சேர்ந்தவர்களுக்கும் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து விரட்டினர். இதனையடுத்து, சிறிதுநேரம் கழித்து வேல்முருகன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் வேல்முருகனை சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் புதரில் வேல்முருகன் ரத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேல்முருகன் உடலை பார்த்து மனைவி கதறி அழுதார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லிக்குப்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.