Asianet News TamilAsianet News Tamil

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி!! நேரில் பார்த்த கணவனுக்கு ஏற்பட்ட சோகம்... 6 வயது மகன் வாக்குமூலம்!

தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால்  கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த பெண், தனது 6 வயது மகனால் போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ளார்.

New lead in Vattappara murder, Rakhi says Manoj lured her using threat police probing wifes role
Author
Thiruvananthapuram, First Published May 22, 2019, 1:54 PM IST

தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால்  கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த பெண், தனது 6 வயது மகனால் போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ளார்.

திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு வட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் வினோத், மனைவி ராக்கி இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் என குடும்பமாக வசித்து வருகின்றனர். வினோத்தின் உறவினரான மனோஜ் அதே பகுதியில் வசித்து வருகிறார். அவர் அடிக்கடி வினோத் வீட்டிற்கு வந்து சென்றதில் ராக்கியுடன் பழக்கம் ஏற்பட்டு, இந்த பழக்கம் வினோத் வீட்டில் இல்லாத சமயத்தில்  உல்லாசமாக இருக்கும் அளவிற்கு பலான தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் வினோத் தனது மனைவி மற்றும் மகனுடன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியதும், கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் சத்தம்போட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். திடீரென ராக்கி அலறும் சத்தம் கேட்டதால் அக்கம், பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் அங்கு ஓடிச் சென்றனர்.

New lead in Vattappara murder, Rakhi says Manoj lured her using threat police probing wifes role

அப்போது தனது வீட்டு முன்பு கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கடந்த வினோத், தகராறு செய்துவிட்டு  தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி மனைவி ராக்கி கதறி அழுதார்.

இதுபற்றி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று வினோத்தின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், வினோத்தின் தந்தை ஜோசப் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் எனது மகன் வினோத்துக்கும், ராக்கிக்கும் திருமணம் ஆனதில் இருந்து தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவரும் தனிக்குடித்தனம் சென்று விட்டனர். அதன் பிறகும் அவர்கள் இடையே தகராறு நீடித்தது. இதனால் வினோத்தை ஆள் வைத்து ராக்கி தாக்கிய சம்பவமும் நடந்து உள்ளது. எனவே எனது மகன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. அதில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

New lead in Vattappara murder, Rakhi says Manoj lured her using threat police probing wifes role

இந்நிலையில் பிரேத பரிசோதனையில் வினோத்தின் கையில் ராக்கியின் தலைமுடி இருந்ததால், சந்தேகம் மனைவி ராக்கி பக்கம் திரும்பியது. இந்நிலையில் போலீஸ் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஆனால் அவர் கணவர் தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவே போலீசாரிடம் மீண்டும், மீண்டும் கூறினார்.

இதனால் ராக்கியின் 6 வயது மகனிடம் போலீசார் விசாரித்தபோது மகன் பேசுவதை இடைமறித்து பேசிய ராக்கி வாக்குமோலத்தை திசைதிருப்புவதாக உணர்ந்த போலீசார்  சிறுவனை தனியாக அழைத்துச் சென்று விசாரித்ததில் தனது தந்தை கொடூரமாக கொலையானதை சொல்லி அழுத்துள்ளான் அந்த சிறுவன்.  

சம்பவத்தன்று ஆலயத்திற்கு சென்று வந்ததும் வினோத் கடைக்கு சென்று உள்ளார். அப்போது மனோஜ், ராக்கியை பார்ப்பதற்காக அங்கு வந்தார். உடனே தனது மகனை வீட்டுக்கு வெளியே விளையாடும்படி அனுப்பிவிட்டு ராக்கி கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசமாக அனுபவித்துள்ளனர்.

அப்போது திடீரென வந்த வினோத், தனது மனைவி ராக்கி கள்ளக்ககாதலன் ம்னோஜ்ஜுடன் உல்லாசமாக இருந்தது நேரில் பார்த்ததால் ஆத்திரமடைந்தார். டென்ஷானான கள்ளக்காதலன் மனோஜ் அங்கிருந்த கத்தியை எடுத்து வினோத் கழுத்தில் குத்தி உள்ளார். கணவர் வினோத் தப்பிவிடாமல் இருக்க அவரது கைகளை மனைவி பிடித்துக்கொண்டு கொலைக்கு உடந்தையாக இருந்து உள்ளார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிறுவன் அழுதுகொண்டே போலீசிடம் கூறியுள்ளான். சிறுவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கள்ளக்காதலன் மனோஜை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக ராக்கியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  

Follow Us:
Download App:
  • android
  • ios