Asianet News TamilAsianet News Tamil

தாயிடம் தவறாக நடந்த ரவுடி.. 5 வருடங்களுக்கு பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ஸ்கெட்ச்போட்டு தூக்கிய 21 வயது மகன்.!

கடந்த  5 வருடங்களுக்கு முன் தன் தாயிடம் தவறாக நடக்க முயன்ற  ரவுடியை, தன் நண்பர்களுடன் சேர்ந்து 21 வயது மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

nellai rowdy murder
Author
Tirunelveli, First Published Jun 24, 2021, 6:31 PM IST

கடந்த  5 வருடங்களுக்கு முன் தன் தாயிடம் தவறாக நடக்க முயன்ற  ரவுடியை, தன் நண்பர்களுடன் சேர்ந்து 21 வயது மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை அருகேயுள்ள கொண்டாநகரம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரின் மகன் மாரியப்பன் (32) இளைஞரான இவர் மீது கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. அப்பகுதியில்  மாரியப்பன் ரவுடியாக வலம்வந்தார். இந்நிலையில், காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாகக் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாரியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

nellai rowdy murder

இந்நிலையில், கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், சுப்பிரமணியன் உள்ளிட்ட  4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, 7 பேர் சேர்ந்து மாரியப்பனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்;- இந்தப் பகுதியில் ரவுடியாக வலம் வந்த மாரியப்பன். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு எங்களின் நண்பன் பிரகாஷின் தாயிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றான். அப்போது 15 வயது சிறுவனாக இருந்த பிரகாஷால் எதுவும் செய்ய முடியவில்லை. பிரகாஷின் தாயிடம் மாரியப்பன் நடந்துகொண்ட விதம் எங்களை வேதனை அடையவைத்தது. 

nellai rowdy murder

இதனால் மாரியப்பனைப் கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.   அவர் குடித்துவிட்டு காட்டுப் பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தபோது 7 பேர் சேர்ந்து அவரை வழிமறித்து  வெட்டி கொலை செய்தோம் என்றனர். இந்த கொலை தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.  இந்த கொலைச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios