பட்டப்பகலில் 2 இளைஞர்கள் ஓட ஓட விரட்டி படுகொலை... நாகர்கோவிலில் பதற்றம்..!
நாகர்கோவில் பட்டப்பகலில் 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் பட்டப்பகலில் 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சி.டி.எம்.புரம் பகுதியில் அஜித்(20), அர்ஜுனன்(17) ஆகிய இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து அவர்கள் மறைத்து வைத்திருந்தா அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரட்டைக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பியது.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.