Asianet News TamilAsianet News Tamil

2 நாட்கள் பட்டினி போட்டு இஸ்லாமிய கைதியின் முதுகில் ‘ஓம்’என்று சூடு போட்ட சிறைக் கண்காணிப்பாளர்...

சிறைக் கண்காணிப்பாளர் ஒருவர் இஸ்லாமிய கைதி ஒருவரின் முதுகில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் ‘ஓம்’ என்று சூடு போட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

muslim Inmate in Tihar Branded With Om Symbol
Author
Delhi, First Published Apr 20, 2019, 10:51 AM IST

சிறைக் கண்காணிப்பாளர் ஒருவர் இஸ்லாமிய கைதி ஒருவரின் முதுகில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் ‘ஓம்’ என்று சூடு போட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.muslim Inmate in Tihar Branded With Om Symbol

டெல்லி திகார் சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதி நிப்பார். இவர் சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளார். 2 நாட்களாக சாப்பாடு எதுவும் கொடுக்காமல் பட்டினி போட்டதுடன், அவரது முதுகில் பழுக்க காய்ச்சிய கம்பியால் ஓம் என்று எழுதி உள்ளனர். சிறை கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகான் இந்த செயலை செய்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விசாரணைக் கைதி நிப்பார், தனது வழக்கறிஞர் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக சிறைத்துறை டிஜிபி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.  சிறையில் நடந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 24 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். muslim Inmate in Tihar Branded With Om Symbol

மேலும், சிறையில் உள்ள அனைத்து சிசிடிவி பதிவுகள் மற்றும் மற்ற கைதிகளின் வாக்குமூலங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கைதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறை கண்காணிப்பாளரை உடனடியாக  பணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

சற்றும் மனிதாபிமான முறையில் நடந்துகொண்ட சிறைக் கண்காணிப்பாளரின் செயலுக்கு வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

 

Follow Us:
Download App:
  • android
  • ios