Asianet News TamilAsianet News Tamil

மாமியாரை மல்லாக்கபோட்டு மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய மருமகள்... புதுக்கோட்டையில் பயங்கரம்..!

புதுக்கோட்டை அருகே தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், கணவருடன் பேசுவதை தடுத்ததால் மாமியரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்ற மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

Mother In Law brutally Murder
Author
Pudukkottai, First Published Jun 5, 2020, 6:27 PM IST

புதுக்கோட்டை அருகே தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், கணவருடன் பேசுவதை தடுத்ததால் மாமியரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்ற மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகே உள்ள மணியம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் அரங்குளவன்( 60). இவர் வன்னியம்பட்டியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜம்மாள்(55). இவர்களுக்கு 2 மகள்களும், ரமேஷ் (28) என்ற மகனும் உள்ளனர். ரமேஷ், புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருந்து கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், வன்னியம்பட்டியை சேர்ந்த பிரதீபாவுக்கும் (23) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

Mother In Law brutally Murder

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தீயில் உடல் கருகிய நிலையில் ராஜம்மாள் கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

Mother In Law brutally Murder

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மருமகள் பிரதீபா மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜம்மாள் எரித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், ராஜம்மாள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், கணவருடன் பேசுவதை தடுத்ததாகவும், அதனால் அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகவும், பிரதீபா கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Follow Us:
Download App:
  • android
  • ios