Asianet News TamilAsianet News Tamil

சிக்கன் கிரேவி கூல் ட்ரிங்க்ஸ் குடித்த தாய், மகள் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்.. கள்ளக்காதலன் கைது.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி கற்பகவல்லி(34). இந்த தம்பதிக்கு சண்முகபாண்டி (8) என்ற மகனும், தர்ஷினி (7) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு கற்பகவல்லி தனது மகளுடன் அப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று பரோட்டா, சிக்கன் கிரேவி வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளனர்.

mother daughter suicide case..youth Arrest
Author
Thoothukudi, First Published Oct 17, 2021, 6:30 PM IST

கோவில்பட்டியில்  பரோட்டா, சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்த தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்ததும் அதற்கான காரணமும் வெளியாகி உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி கற்பகவல்லி(34). இந்த தம்பதிக்கு சண்முகபாண்டி (8) என்ற மகனும், தர்ஷினி (7) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு கற்பகவல்லி தனது மகளுடன் அப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று பரோட்டா, சிக்கன் கிரேவி வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளனர்.

mother daughter suicide case..youth Arrest

அப்போது, சாப்பிட்ட சிறிது நேரத்தில் வயிற்றெரிச்சல் ஏற்படவே அருகில் உள்ள கடையில் இருந்து 10 ரூபாய் மதிப்புள்ள குளிர்பானத்தினை வாங்கி குடித்துள்ளனர். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உறவினர்கள் இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்தனர். ஹோட்டலில் அவர்கள் சாப்பிட்ட சிக்கன் கிரேவி, பரோட்டா, கடையில் வாங்கிக்குடித்த குளிர்பானம் ஆகியவற்றின் மாதிரிகளை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

mother daughter suicide case..youth Arrest
மேலும், கற்பகம் பயன்படுத்தி வந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, கற்பகத்தின் வீட்டின் அருகே இருக்கும் தையல் தொழிலாளி வீரப்பெருமாள் (34) என்பவருக்கும், கற்பகத்துக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. உல்லாசத்துக்கு வரும் படி கற்பகத்தை அழைத்துள்ளார். இதற்கு அவள் மறுத்துள்ளார். 

mother daughter suicide case..youth Arrest

தன்னுடன் வரவில்லை என்றால், ஏற்கனவே இருவரும் ஒன்றாக இருந்த போது எடுத்த படம் மற்றும் வீடியோவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரும் காட்டி விடுவேன் என்று மிரட்டியது தெரியவந்தது. இதனையடுத்து, வீரப்பெருமாள் மிரட்டியதால், குளிர்பானத்தில் விஷம் கலந்து தானும் குடித்து, தனது மகளுக்கும் கொடுத்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. கற்பகத்தை தற்கொலைக்கு தூண்டியதாக வீரப்பெருமாளை போலீசார் கைது செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios