Asianet News TamilAsianet News Tamil

சொல்ல சொல்ல கேட்காம அவன நம்பி போனியே!இப்படி உன்ன பண்ணிட்டாங்களே!காதல் திருமணம் செய்த பெண் 37 நாளில் மர்மமரணம்

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்பெண் 37 நாட்களே ஆன நிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

married for love Young Women commits suicide in villupuram
Author
Villupuram, First Published Aug 5, 2022, 11:41 AM IST

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்பெண் 37 நாட்களே ஆன நிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் கோபிநாத் (25). இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகள் கலைச்செல்வி (20) என்பவரை காதலித்து கடந்த ஜூன் 27ம் தேதி சென்னையில் உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கலைச்செல்வியின் தந்தை முருகன், தனது மகளை கடத்தி சென்று விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் பெரியதச்சூர் போலீசார் கடந்த ஜூலை 2ம் தேதி இருதரப்பையும் அழைத்து விசாரணை நடத்தினர். 

இதையும் படிங்க;- ஒரு பேராசிரியைக்கு இவ்வளவு ஒரு காமவெறியா? கள்ளக்காதலை துண்டித்த காதலன்.. 40 இடங்களில் கத்தியால் குத்தி கொலை

married for love Young Women commits suicide in villupuram

அப்போது, கலைச்செல்வியை அவரது விருப்பத்தின் பேரில் கணவன் கோபிநாத்துடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கலைச்செல்வி, தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. தாய் வீட்டுக்குச் சென்ற கலைச்செல்வி மீண்டும் வீடு திரும்பாததால், கோபிநாத் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது அங்கும் காணவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் நேற்று முன்தினம் காலை அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் கலைச்செல்வி சடலமாக இறந்து கிடந்தார். இதனை அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

married for love Young Women commits suicide in villupuram

இதற்கிடையே கலைச்செல்வியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து,  கலைச்செல்வியின் கணவர் கோபிநாத், மாமனார் ஸ்ரீதர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாமியார் பூமாதேவி (50) என்பவரை தேடி வருகின்றனர். திருணமாகி ஒரு மாதமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- ஃபர்ஸ்ட் நைட் முடிந்த மறுநாளே இளம்பெண் செய்த காரியம்.. 15 லட்சத்தை இழந்த புதுமாப்பிள்ளை கதறல்.!

Follow Us:
Download App:
  • android
  • ios