திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (36). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தஞ்சாவூர் அருகேயுள்ள கள்ளப் பெரம்பூர் பகுதியை சேர்ந்த தாட்சர் (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது நகை, பணம் உள்ளிட்டவை பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், முதலிரவில் மனைவியை தவிர்த்துவிட்டு தனி அறையில் எட்வின் செல்போனில் நீண்டநேரம் பேசி வந்தார்.

உறவினர் வாடிக்கையாளர் உள்பட 40 பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்த வங்கி ஊழியரை அவரது மனைவியே காட்டிக்கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (36). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தஞ்சாவூர் அருகேயுள்ள கள்ளப் பெரம்பூர் பகுதியை சேர்ந்த தாட்சர் (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது நகை, பணம் உள்ளிட்டவை பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், முதலிரவில் மனைவியை தவிர்த்துவிட்டு தனி அறையில் எட்வின் செல்போனில் நீண்டநேரம் பேசி வந்தார்.

இதையும் படிங்க;- பிடிச்சவன் கிட்ட எல்லாம் படுக்கையை விரித்த ஆசிரியை... உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவரை கொல்ல முயற்சி..!

மனைவியுடன் நெருங்கி பழக மறுத்த கணவரின் செயல்பாடுகள் தாட்சருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. தன்னிடம் ஏதாவது குறை இருக்கிறதா? என்று வெளிப்படையாகவே கேட்ட மனைவியிடம் எரிந்து விழுவதையே எட்வின் ஜெயக்குமார் வாடிக்கையாக கொண்டிருந்தார். இரவில் வெகுநேரம் செல்போனில் மூழ்கியிருந்த எட்வின் ஜெயக்குமார் திடீரென மேலும் 50 பவுன் நகை வரதட்சணையாக வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். 

இதுபோல தினம்தோறும் அவரது தனி அறையில் செல்போனில் ஆபாசமாக பேசி வந்துள்ளார். இது, தாட்சருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கணவர் வேலைக்கு சென்றவுடன் அவரது அறையை சோதனையிட்டபோது 15 செல்போன்கள் இருந்தது. அந்த செல்போன்களில் பெண்களின் நிர்வாண படங்கள் பல பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் ஆபாசமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் 40 பெண்களுடன் தனது கணவன் நிர்வாண கோலத்தில் உல்லாசமாக இருக்க வீடியோக்கள் இருந்தது.

இதையும் படிங்க;- திமுக ஆணவத்தின் உச்சியிலிருந்து அழிவின் பள்ளத்தாக்கில் விரைவில் விழும்... சாபம் விடும் மக்கள் நீதி மய்யம்..!

மேலும், எட்வின் பாத்ரூமில் நிர்வாணமாக நின்ற படி பல பெண்களுடன் வீடியோ கால் பேசி அதை செல்போனில் பதிவு செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தனது மாமியார் கணவரின் தங்கை அவரது உறவுக்காரப் பெண் ஆகிய இருவரும் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. மேலும் லில்லிஹைடா, ரீட்டா ஆகியோருக்கிடையே ஓரினச்சேர்க்கை உறவு இருந்ததை அறிந்த தாட்சர் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளானார். தனது அந்தரங்க தெரிந்து விட்டது இதுகுறித்து தனது மாமியார் கணவரின் தங்கை அவர்களது உறவுக்காரப் பெண் ஆகியோரிடம் இந்த விவகாரம் தொடர்பாக கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. தனது அந்தரங்க தெரிந்துவிட்டது தனது தாய் மூலம் அறிந்து கொண்ட எட்வீன் வீட்டுக்கு வந்து மனைவி திட்டினார். 

இந்நிலையில், அதே வங்கியில் பணியாற்றும் பெண் தனது கணவரின் கள்ளக்காதலி என்பதையும் அறிந்து கொண்டு தாட்சர் கேட்டப்போது எட்வின் சரியான பதில் கூறவில்லை. மேலும், இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது அப்படிச் சொன்னால் நீ குளிக்கும்போது ஆபாச வீடியோ எடுத்து வைத்துள்ளேன். இந்த வீடியோவை தனது கள்ளக்காதலியிடம் உள்ளது எங்களை பற்றி வெளியே சொன்னால் அந்த வீடியோ புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது பெற்றோரிடம் கதறியபடி கூறியுள்ளார். தனது அந்தரங்கத்தை மனைவி வெளியே சொல்லி விட்டதால் ஆத்திரத்தில் எட்வின் மனிதரிடம் ஒரு தேவாலயத்தில் சென்று கொலை செய்ய முயற்சித்துள்ளார், இக்கொலை முயற்சியில் தப்பித்த மனைவி வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மனைவி போலீசுக்கு போனதால் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் மதுரை உயர்நீதிமன்றத்தில் எட்வின் ஜெயக்குமார் முன் ஜாமீனும் பெற்றுள்ளார்.