Asianet News TamilAsianet News Tamil

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் கணவன் செய்த காரியம்.. நிலைகுலைந்து போன குடும்பம்!!

சென்னை அருகே மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட கணவன், அவரை கொலை செய்து தானும் தூக்கிட்டு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

man murdered his wife and commited suicide
Author
Chennai, First Published Sep 10, 2019, 11:15 AM IST

சென்னை பூந்தமல்லி அருகே இருக்கும் பாப்பான் சத்திரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். மாரிமுத்து அங்கிருக்கும் தனியார் தோட்டத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார்.

man murdered his wife and commited suicide

இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற மாரிமுத்து வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பல இடங்களில் தேடிப்பார்த்து விட்டு அவரது மகன்கள் இருவரும் அவர் வேலை பார்க்கும் தோட்டத்திற்கு நேற்று மதியம் சென்றிருக்கின்றனர்.

அங்கு சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருக்கும் மரமொன்றில் மாரிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். அவரது மனைவி ரேவதி வேட்டியில் கழுத்து இறுக்கப்பட்டு இறந்துகிடந்தார். இதைப் பார்த்த அவரது மகன்கள் கதறி துடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அங்கிருப்பவர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை இருவரின் உடல்களையும் மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது.

man murdered his wife and commited suicide

இதை அடுத்து அவரது மகன்களிடம் காவல்துறை விசாரணை செய்தனர். அப்போது தனது மனைவியின் நடத்தை மீது சேகருக்கு சந்தேகம் இருந்தது தெரிய வந்தது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. 

எவ்வளவு சொல்லியும் கேட்காத தன் மனைவியின் மீது ஆத்திரமடைந்த மாரிமுத்து அவர் அணிந்திருந்த வேட்டியால் ரேவதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து இருக்கிறார். மனைவியை கொலை செய்து விட்டதால் அங்கிருக்கும் மரத்தில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் சேகர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios