டெல்லி ஹட்சன் லேன் பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் 12ம் தேதி அந்த விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

பெண்கள் விடுதி முன்பு வாலிபர் ஒருவர் சுய இன்பம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மகளிர் உரிமை ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டெல்லி ஹட்சன் லேன் பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் 12ம் தேதி அந்த விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு வாலிபர் திடீரென பேண்டை கழற்றி பெண்கள் முன்பு நின்று சுய இன்பம் செய்ய தொடங்கியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் முகம் சுழித்தனர். இதனையடுத்து, அந்த பெண்கள் சுய இன்பம் செய்ததை வீடியோ எடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், இந்த புகார் தொடர்பாக காவல்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

Scroll to load tweet…

இந்நிலையில், இந்த விவகாரத்தில் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால் இந்த வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது போன்ற செயல்கள் அபாயகரமானவை. உடனடி நடவடிக்கை தேவை என்று கூறியுள்ளார்.