சீக்கிரம் வாங்க.. 17 வயது மகளை 52 வயது கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்.. வெளியான பகீர் தகவல்.!
அந்த நபர் வீட்டிலிருக்கும் 17 வயதான பெண்ணை பார்த்துமே அவளை அடைய வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இதுதொடர்பாக தனது ஆசை தொடர்பாக கள்ளக்காதலியிடம் கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத தாய் அதிர்ச்சியடைந்து பிறகு ஒப்புக்கொண்டார்.
பெற்ற மகளை 52 வயதான கள்ளக்காதலனுக்கு தாயே விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கள்ளக்காதலன் மற்றும் அவரது தாய் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். ஆனால், தந்தையுடன் செல்லாமல் தாயுடன் அவரின் மகள் மற்றும் மகன் தங்கிவிட்டனர்.
இந்நிலையில், அவர் வசித்து வந்த பகுதியில் 52 வயதான நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி வந்து உல்லாசமாக இருந்துவிட்டு சென்றுள்ளார். அப்போது அந்த நபர் வீட்டிலிருக்கும் 17 வயதான பெண்ணை பார்த்துமே அவளை அடைய வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இதுதொடர்பாக தனது ஆசை தொடர்பாக கள்ளக்காதலியிடம் கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத தாய் அதிர்ச்சியடைந்து பிறகு ஒப்புக்கொண்டார்.
இதுதொடர்பாக தாய் தன் மகளிடம் கள்ளகாதலனின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வெளியே சென்று விட்டார். இதனால் அந்த பெண்ணை கடந்த 2020ம் ஆகஸ்ட் மாதம் 2 பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து, கொடூரமான குற்றத்தை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தார். ஆனால், அந்த நபர் மீண்டும் அடிக்கடி தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.
இதுதொடர்பாக போலீசாரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கள்ளக்காதலன் மற்றும் பெண்ணின் தாயாரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.