Asianet News TamilAsianet News Tamil

மதுரையில் தலை நசுங்கிய நிலையில் பிரபல ரவுடி கொடூரக் கொலை..!

மதுரையில் பிரபல ரவுடியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

madurai rowdy murder
Author
Tamil Nadu, First Published Jul 2, 2019, 1:35 PM IST

மதுரையில் பிரபல ரவுடியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். madurai rowdy murder

மதுரை மாவட்டம், செல்லூர் அடுத்த மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் மீது வழிப்பறி, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. இந்நிலையில், நேற்று இரவு செல்லூர் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து சதீஷ்குமாரின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர். madurai rowdy murder

இந்நிலையில், அவ்வழியாக சென்ற ஒருவர் தலை நசுங்கிய நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios