Asianet News TamilAsianet News Tamil

இளமையை தொலைத்து தனிமையில் ஏங்கிய முதிர்கன்னி.. 17 வயது சிறுவனுடன் உல்லாசம். தரமான சம்பவம்.

17 வயது சிறுவன் தன்னுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, பணத்தையும் பறித்து ஏமாற்றியதகா 35 வயது பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது சத்தீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Love affair between 35 year old girl and 17 year boy boy cheated after physical relationship
Author
Chhattisgarh, First Published Aug 4, 2021, 5:58 PM IST

17 வயது சிறுவன் தன்னுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, பணத்தையும் பறித்து ஏமாற்றியதகா 35 வயது பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது சத்தீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணவனை இழந்த அந்த 35 வயது பெண் 17 வயது இளைஞருடன் பழகி வந்ததும், பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்தும், திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுவம் அந்த பெண்ணிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை வாங்கி ஏமாற்றியதும்  தெரியவந்துள்ளது. 

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை சிலர் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள் என்பது அனுபவ மொழி. சில நேரங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய பெண்களே ஏமாற்று பேர்வழிகளிடம் சிக்கி.. தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதுகூட தெரியாமல் இருந்துவிட்டு, இறுதியாக காவல் நிலையத்தின் கதவை தட்டும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 35 வயது பெண்,  17 வயது சிறுவனை நம்பி ஏமாந்து உள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலம்  ஜஸ்பூர் கார்டன்  காவல் நிலையத்திற்குட்பட்ட 35 வயது பெண், அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். இது குறித்து அக்காவல்நிலைய போலீசார் தெரிவித்துள்ளதாவது:- 

Love affair between 35 year old girl and 17 year boy boy cheated after physical relationship

ஜஸ்பூர் கார்டன் பகுதியில் வசிக்கும் 37 வயதான பெண்ணுக்கும். சுர்குஜா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் தனிமையில் வாழ்வதால் அடிக்கடி அந்த இளைஞருடன் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். பின்னர் அது நாளடைவில் இருவருக்கும் இடையே அது காதலாக மாறியது. பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக அந்த இளைஞர் கூறியதால் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். பின்னர் நாளடைவில் அந்த இளைஞர் அந்தப் பெண்ணை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் காயப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அதே நேரத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி ஆயிரக்கணக்கில் பணத்தை கறந்ததாக தெரிகிறது. 

Love affair between 35 year old girl and 17 year boy boy cheated after physical relationship

ஒரு கட்டத்தில் அந்த வாலிபரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் வற்புறுத்தினார். ஆனால் அந்த வாலிபர் எனக்கு நீங்கஅக்கா மாதிரி திருமணம் எல்லாம் சரிப்பட்டு வராது என கூறியது நழுவ தொடங்கியுள்ளார். பின்னர் அந்த இளைஞன் அந்த பெண்ணை சந்திப்பதை நிறுத்திக் கொண்டார். இதனால் செய்வதறியாது திகைத்த அந்தப்பெண், அந்த இளைஞனை அடிக்கடி தொலைபேசியில் அழைத்தார், ஆனால் அந்த இளைஞன் காதலனின் தம்பியைப் பேசி அந்த பெண்ணுக்கு டிமிக்கி கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற அந்த பெண், 17 வயது இளைஞரால் தான் ஏமாற்றப்பட்டது குறித்து காவல்  நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த பெண்ணை ஏமாற்றி விட்டு தலைமறைவாக இருந்த அந்த இளைஞனை பிடித்து போலீசார் சிறுவர் கண்காணிப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். 17 வயது சிறுனிடம் 35 வயது பெண் கற்பை பறிகொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios