தனது கள்ளக்காதலிக்கு வேறொரு இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டதால் கல்லாக காதலியை கொடூரமாக கொலை செய்து தலைமறைவாக இருந்த கள்ளக் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி குமரகுருபள்ளத்தை சேர்ந்த கீதா ரமணி, இவர் தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக தனது குழந்தைகளோடு வாழ்ந்து வந்தார். இதற்கு காரணம் அருகே தட்டு வண்டிக் கடை வைத்திருந்த ஆனந்த் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் கணவன் கழட்டி விட்டதாக தெரிகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கணவர் பிரிந்த பிறகு ஜெயராம் நகரில் வயது வந்த பிள்ளைகளுடன் கீதா வசித்து வந்த இவரோடு கள்ளக் காதலன் ஆனந்த் அவ்வப்போது வீட்டுக்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் கீதாவுக்கு வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் தட்டுவண்டிக்காரன் வீட்டிற்கு வராத சமயத்தில், வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென தட்டுவண்டி ஆனந்த் உல்லாசத்துக்கு அழைத்த போது கீதா ரமணி வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்து ஆனந்த் சனிக்கிழமை கீதாவை நடு ரோட்டில் வைத்து குத்தி கொடூரமாக கொலை செய்தார். தலைமறைவான ஆனந்ததை போலீசார் வந்தனர். இந்நிலையில் கருவடிக்குப்பம் கால்நடை மருத்துவமனை அருகேயுள்ள அவரது வீட்டில் ஆனந்தை கைது செய்தனர்.