Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் பயங்கரம்.. ஐயோ அம்மா என்னை காப்பாத்துங்க.. பட்டப்பகலில் வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை..!

இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு அருகில் இருந்த காலி மைதானத்துக்கு நண்பருடன் ஓடினார். ஆனால், மர்மகும்பல் அவரை விரட்டி சென்று, சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கை, கால் உள்பட உடல் முழுவதும் படுகாயமடைந்த தனசேகர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிாந்தார். 

kundrathur youth stabbed to murder...police investigation
Author
Chennai, First Published Jun 13, 2021, 11:06 AM IST

முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

சென்னை குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர் (36). அதே பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இன்று மதியம் தனது நண்பர் தண்டபாணி என்பவருடன் வேலை முடித்து விட்டு  இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

kundrathur youth stabbed to murder...police investigation

அப்போது, வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தனசேகரை நோக்கி ஓடி வந்தனர். இதை கண்டதும் தனசேகர் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு அருகில் இருந்த காலி மைதானத்துக்கு நண்பருடன் ஓடினார். ஆனால், மர்மகும்பல் அவரை விரட்டி சென்று, சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கை, கால் உள்பட உடல் முழுவதும் படுகாயமடைந்த தனசேகர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிாந்தார். இதையடுத்து மர்மநபர்கள், அங்கிருந்து தப்பிசென்றது. 

kundrathur youth stabbed to murder...police investigation

இதுகுறித்து, உடனே குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  தனசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கடந்த 2018ம் ஆண்டு இதே பகுதியில் முன்விரோதம் காரணமாக ரத்தினம் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் தனசேகர் கைது செய்யப்பட்டார். 

அந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக தற்போது தனசேகரை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், தப்பியோடிய மர்மநபர்களை, 3 தனிப்படைகள் அமைத்து தேடிவருகின்றனர். பட்டப்பகலில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios