Asianet News TamilAsianet News Tamil

யூனிபார்ம் டைட்டா போட்டுவந்ததால் ஆத்திரம்.. கண்முன் தெரியாமல் போட்டு அடித்த ஆசிரியர்..

கோவையில் தனியார் பள்ளி மாணவன் ஒருவர் சட்டையை இறுக்கமாக அணிந்து வந்ததற்காக ஆசிரியர் கொடூரமாக தாக்கியதில்,காயம் அடைந்த மாணவன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

kovai student attack
Author
Kovai, First Published Dec 11, 2021, 8:12 PM IST

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருபவர் மிதுன். இன்று பள்ளிக்கு வழக்கம்போல் மாணவன் மிதுன்    சென்றுள்ளார். அப்போது அவர்  இறுக்கமான ஆடை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. இறுக்கமான ஆடை அணிந்து வந்தது தொடர்பாக மாணவனிடம் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித் கேட்டுள்ளார்.

மாணவரும் சட்டை ரொம்ப பெரிதாக இருந்தது. அதனால் தான் என்று தைத்து போட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். இதனிடையே மாணவர் மிதுன் காரணங்களை கூறியபோதும் காரணத்தை ஏற்றுக்கொள்ளாத ஆசிரியர் சிவரஞ்சித் மாணவனை மிகக் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மாணவன் வலியால் அலறி துடிக்கும் அளவுக்கு, தொடர்ந்து 20 நிமிடங்கள் ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது.

kovai student attack

அவரது சத்தம் கேட்டு அருகில் வகுப்பில் இருந்த ஆசிரியர்கள் ஓடி வந்து மாணவரை மீட்டனர். இதில் மாணவருக்கு கை, காது, முதுகு உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் மாணவர் இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார். பெற்றோர் பள்ளிக்கு வந்து மாணவரை உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆசிரியரின் தாக்குதலில் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் மாணவன் கொடுத்த பேட்டியில், பள்ளி சார்பில் கொடுக்கப்பட்ட சீருடை எனக்கு சரியாக பொருந்தவில்லை. இதன் காரணமாக அதனை தைத்து இறுக்கமாக அணிந்து வந்தேன். இதற்காக தகாத வார்த்தையில் தன்னை பேசியதுடன் கொடூரமான முறையில் தன்னை அனைவர் முன்னிலையிலும் ஆசிரியர் அடித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு ஆசிரியர் தன்னை தாக்கி விட்டதாக கூறினார்.

kovai student attack

ஆசிரியரின் இந்த கொடூர செயலை மாணவனின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் கண்டித்துள்ளனர். அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இதுக்குறித்து மாணவனின் பெற்றோர்  சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios