Asianet News TamilAsianet News Tamil

மனைவிகளை மாற்றி, உல்லாசம் அனுபவித்து வந்த கணவன்கள்.... கேரளாவில் நடந்த கேவலம்!! எகிறவைக்கும் க்ரைம் ரேட்...

தங்களது மனைவிகளை வேறொருவருக்கு உல்லாசம் அனுபவிக்க அனுப்பிவிட்டு, அவர்களது மனைவியை உல்லாசம் அனுபவித்து வந்த வந்த கேரளாவை சேர்ந்த கணவன்களை  போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kerala 'wife swapping' nightmare: Woman repeatedly raped at husband's behest
Author
Kerala, First Published Apr 30, 2019, 3:18 PM IST

தங்களது மனைவிகளை வேறொருவருக்கு உல்லாசம் அனுபவிக்க அனுப்பிவிட்டு, அவர்களது மனைவியை உல்லாசம் அனுபவித்து வந்த வந்த கேரளாவை சேர்ந்த கணவன்களை  போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், ஆழப்புழா மாவட்டம் காயம்குளம் பகுதியை சேர்ந்தவர் ஷபின் ராஜ், டிராவல் ஏஜென்சியில் வேலை செய்து வரும் அவரது மனைவி பெயர் வனஜா. இருவரது வாழ்க்கையும் நன்றாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார்.

கடந்த மார்ச் மாதம், ஷேர்சாட் சமூக வலைத்தளத்தில் ஷபினுக்கு   கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவர் நண்பர் ஆனார். அவரும், ஷபினும், மனைவிகளை மாற்றிக் (wife swapping) கொள்வதில் ஆர்வம் காட்டி பேசியுள்ளனர். இதையடுத்து, நாள் குறித்த இவர்கள் இந்த செயலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம், முதல் முறையாக இப்படியான ஒரு கேவலம் அரங்கேறியிருக்கிறது. ஷபின் ராஜ், தனது இது குறித்து தனது மனைவி வனஜாவிடம் கூறி, அவரை சம்மதிக்க வைத்த  சாட்டிங் நண்பருடன், வனஜாவை காரில் வைத்து உறவு கொள்ள வைத்துள்ளார். மேலும் அந்த நண்பனின் மனைவியுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார்.

இதன்பிறகும், திருப்தியடையாத ஷபின், ஷேர்சாட் ஆப் மூலம், பிற ஆண்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு, அவர்களின் வீடுகளுக்கே மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து, அந்த நண்பர்களின் மனைவிகளை ஷபினும், ஷபின் ராஜ் மனைவியை, அந்த நண்பர்களுக்கு மாற்றிக் கொண்டு உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். 

இந்நிலையில், கொல்லம் கருநாகபள்ளி என்ற ஊரில் உள்ள ஒரு இளம் தம்பதி ஷபினுக்கு பழக்கம் ஆகியுள்ளார். அவர்கள் வீட்டுக்கு 3 முறை சென்ற இந்த ஷபின் ராஜ் வனஜா தம்பதி, மாறி மாறி உறவு கொண்டுள்ளனர். மனைவியை ஒரு ஆணுடன் மட்டும் மாற்றிக் இப்படியே நடந்து வந்தது சில நாட்களில்  ஷபினுக்கு போரடிக்க அதனால் ஒரே நேரத்தில் நிறைய ஆண்களுடன் சிந்துவை உறவு கொள்ள வைத்தும் ரசித்துள்ளார் ஷபின் ராஜ். 

சமீபத்தில் திருவள்ளா என்ற பகுதியில் ஒரு தம்பதி வீட்டுக்கு ஷபினும், வனஜாவும், சென்றுள்ளனர். அந்த நண்பனோடு ஷபின்ராஜ் மனைவி  வனஜா உறவு கொள்ள சம்மதிக்கவில்லை. ஆனாலும், அந்த பெண்ணுடன் ஷபின் ராஜ் உறவு உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனையடுத்து தனது மனைவி வனஜாவுடன் சண்டை போட ஆரம்பித்துள்ளார் ஷபின் ராஜ். சொல்லும் ஆண்களுடன் எல்லாம் உறவு வைக்காமல் நீ எப்படி மறுக்கலாம்? என கேட்டுள்ளார் திட்டி அடித்துள்ளார். ஆனால், கண்ணீர் விட்டு அழுத்த வனஜா சில பெண்களின் கணவன்கள் வெறித்தனமாக உறவு கொள்வதாகவும், எனவே அவர்களுடன் நெருக்கமாக இருக்க முடியாது என்றும் சொன்னாராம்.

ஆனாலும், வனஜாவை கட்டாயப்படுத்திய ஷபின் ராஜ், சம்மதிக்காவிட்டால் விவாகரத்து செய்துவிடுவதாக மிரட்டி மற்றொரு ஜோடி வீட்டுக்கு வனஜாவை, தனது ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றுள்ளார் ஷபின் ராஜ். அப்போது ஓடிக் கொண்டிருந்த ஸ்கூட்டரில் இருந்து கீழே குதித்த வனஜா,  போலீஸ் ஸ்டேஷனில் தனது கணவனின் இந்த கேவலமான வேலையை பற்றி புகார் அளித்துள்ளார். அதிர்ச்சியடைந்தனர் காவல்துறையினர். உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார் பெண்களின் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவித்தல், பலாத்காரம், கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்து ஷபின் ராஜ் மற்றும்  ஷேர் சாட் நண்பர்கள் பேரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே 23 முதல் 38 வயதுக்கு உட்பட்ட ஆண்கள். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்ந்து கணவரை மாற்றிக் கொண்ட பெண்களை காவல்துறை கைது செய்யவில்லை. மேலும், வனஜாவுடன், முதல் முதலில் காரில் வைத்து உறவு கொண்ட அவன்  இன்னும் கைது செய்யப்படவில்லை சோஷியல் ஆப் மூலமாக மனைவி மாற்றப்பட்ட சம்பவம் கேரளா முழுவதும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios