Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் பயங்கரம்.. பாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கல்நெஞ்ச கணவர்.. போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது பாம்பை ஏவி கொன்று விட்டு நாடகமாடிய கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவரிடன் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

Kerala man kills wife with cobra...husband arrest
Author
Thiruvananthapuram, First Published May 25, 2020, 11:00 AM IST

தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது பாம்பை ஏவி கொன்று விட்டு நாடகமாடிய கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவரிடன் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவருடைய மனைவி உத்ரா ( 25). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த மார்ச் மாதம் உத்ராவை பாம்பு கடித்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் அவரது தாய் வீட்டில் ஓய்வெடுத்தார். இதற்கிடையே கடந்த 6-ம் தேதி இரவு மனைவியை பார்ப்பதற்காக சூரஜ் அஞ்சல் பகுதிக்கு சென்றார். அன்று இரவு மனைவியின் வீட்டில் தங்கினார். மறுநாள் உத்ரா நீண்ட நேரமாக தூங்கி கொண்டிருப்பதை கண்ட தாயார் அவரை எழுப்ப முயன்றார்.

Kerala man kills wife with cobra...husband arrest

அப்போது அசைவற்று கிடந்த உத்ராவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உத்ரா பாம்பு கடித்து இறந்ததாக தெரிவித்தனர். ஆனால், மகள் உத்ராவின் சாவில் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

Kerala man kills wife with cobra...husband arrest

அப்போது, கணவர் சூரஜின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, சூரஜிடம் போலீசார் அவர்களுக்கு உரித்தான பணியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், சூரஜ் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். சூரஜ் மனைவியின் நகைக்காக அவர் மீது பாம்பை ஏவி விட்டு கொலை செய்ததாக கூறினார். 

Kerala man kills wife with cobra...husband arrest

சூரஜ், மனைவிக்கு தெரியாமல் பேங் லாக்கரில் இருந்த நகைகளை எடுத்து ஊதாரித்தனமாக செலவு செய்தார். இதனால் அதிர்ச்சி உத்ரா, கணவரிடம் கேட்டதால் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, சூரஜ் மனைவியை கொல்ல திட்டமிட்டார். இதற்காக மூர்க்கன் வகை பாம்பை ரூ.10 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கினார். கடந்த 6-ம் தேதி பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த உத்ராவை பார்ப்பதற்காக சென்றார். அப்போது ஒரு பையில் பாம்பையும் எடுத்து சென்றார். அன்று இரவு 12 மணி வரை மனைவியுடன் பேசி கொண்டிருந்தார். உத்ரா தூங்கிய பின்பு அவர் மீது பாம்பை ஏவி விட்டு கடிக்க வைத்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios