Asianet News TamilAsianet News Tamil

அலறிதுடித்த அவங்கள வெறி தீர குத்தினேன்... வேலைக்காரியை சமயலறையில் வெச்சு வெட்டினேன்... க்ரைம் த்ரில்லர் படங்களை மிஞ்சும் மர்டர்!! சீனியம்மாளின் மகன் வாக்குமூலம்

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன், ஒரு சைக்கோ கொலைகாரனை போல போலீசாரிடம் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி வருகிறான். இடையிடையே நான் ஒரு ‘சைக்கோ’ என்றும்  திரும்ப திரும்ப கூறி வருகிறாராம். ஆனால், போலீசார் கூலிப்படை துணை இல்லாமல் 3 பேரை  தனி ஒருவனாக கொலை செய்வது சாத்தியமா? என்பதால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Karthigeyan statement former mayor murdered case arrested
Author
Thirunelveli, First Published Jul 29, 2019, 5:51 PM IST

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன், ஒரு சைக்கோ கொலைகாரனை போல போலீசாரிடம் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி வருகிறான். இடையிடையே நான் ஒரு ‘சைக்கோ’ என்றும்  திரும்ப திரும்ப கூறி வருகிறாராம். ஆனால், போலீசார் கூலிப்படை துணை இல்லாமல் 3 பேரை  தனி ஒருவனாக கொலை செய்வது சாத்தியமா? என்பதால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் யார் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற போலீசாரின் கேள்விக்கு கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல், 3 பேரையும் ஒருவனே தன்னந்தனியாக கொலை செய்தேன் என்று கூறி வருகிறாராம். எப்படி இந்த கொலையை செய்தாய் என்று நடித்து காட்ட  கார்த்திகேயனை ஒரு காரில் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றனர் போலீசார்.

அப்போது கார்த்திகேயன் அளித்த வாக்குமூலத்தில்; திமுகவில் பெரிய சக்தியாக வளரவேண்டிய எனது அம்மா, மேயர் உமா மகேஸ்வரி வந்ததால் டம்மியாகக்கப்பட்டார். இதனால் எனக்கு சின்ன வயசிலிருந்தே உமா மகேஸ்வரியை கொல்ல வேண்டும் என வெறி எனக்குள் இருந்தது. எப்படி யாருக்கும் தெரியாமல் இந்த கொலையை செய்வது என சிந்தித்து பார்த்தேன்.

இந்நிலையில், ஜூலை 23-ந்தேதி அனைத்து போலீசாரும், மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்று தெரிந்து அன்றைய தினத்தை தேர்வு செய்து நெல்லைக்கு வந்தேன். முதலில் எனது காரில் உமா மகேஸ்வரியின் வீட்டருகே சுற்றி சுற்றி வந்து வேறு யாரும் உள்ளார்களா? என பார்த்தேன். அப்போது வேறு யாருமே உள்ளே இல்லை என்று தெரிந்தது.

இதைத் தொடர்ந்து எனது காரை என்ஜிஓ ‘பி’ காலனி விலக்கு அருகே உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச் அருகே நிறுத்திவிட்டு அங்கிருந்து உமா மகேஸ்வரி வீட்டுக்கு நடந்து சென்றேன். என்னை பார்த்ததும் உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன் என்ன வி‌ஷயம் என்று கேட்டார். எனது அம்மா உங்களிடம் பேசி விட்டு வர சொன்னார் என் சொன்னதும் அவர் கதவை திறந்தார்.

நான் உள்ளே சென்று ஷோபாவில் அமர்ந்து அவரிடம் கொஞ்ச நேரம் பேசினேன். அப்போது உங்களால் தான் என் அம்மாவின் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது என ஆவேசமாக பேசி திட்டினேன். அப்போது வீட்டுக்குள் இருந்து உமா மகேஸ்வரி வந்து இப்படி பேசக்கூடாது வெளியே போ என்றார். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உமா மகேஸ்வரியை குத்தினேன்.

அப்போது ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே அவரது கணவர் அதிர்ச்சியில்  கத்தியபடி என்னை பிடிக்க முயன்றார். அவரையும் கத்தியால் குத்தினேன். இதனால் அவர் உயிர் பிழைக்க படுக்கை அறைக்குள் புகுந்து கதவை மூட முயன்றார். ஆனால் நான் அவரை கீழே தள்ளி சரமாரியாக குத்தினேன். அவர் பிணமாகி விட்டார் என்று தெரிந்தது, வெளியே வந்தேன்.

அங்கு உமா மகேஸ்வரி உயிருக்கு போராடிதுடித்துக்கொண்டிருந்தார். இதனால் மீண்டும் அவரை வெறி தீரும் வரை குத்தி கொன்றேன். அதன் பின் நகைக்காக கொலை நடந்தது போல் இருக்க வேண்டும் என்று உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் உடலில் இருந்த அனைத்து நகைகளையும் வேகமாக இழுத்து அறுத்தேன். அனைத்து நகைகளையும் ஒரு பையில் போட்டு பின்னர் பீரோவை உடைத்து நகைகள்-பணம் கொள்ளை நடந்து இருப்பது போல கலைத்து போட்டேன்.

அப்போது முன்பக்க காம்பவுண்டு கேட் திறக்கும் சத்தம் கேட்டது. இதனால் யார் வருகிறார்கள் என்று மறைந்து இருந்து பார்த்தேன். அப்போது வேலைக்கார பெண் உள்ளே வந்து கொலை சம்பவத்தை பார்த்து வெளியே ஓட முயன்றார். அவளை வெளியே தப்பவிடாமல் பிடித்தேன். அவரை வெளியே விட்டால், என்னை பற்றி தகவல்களை கூறி விடுவார் என்று பயந்து அவரையும் கொலை செய்ய முடிவு செய்து, சமையல் அறைக்கு இழுத்து சென்று அவளையும் குத்தினேன். அவர் சாகாமல் போராடியதால் அங்கு கிடந்த பாத்திரங்களால் தலையில் வேகமாக அடித்து கொன்றேன்.

பின் கொலை செய்யப்பட்ட இடங்களில் ஏதாவது தடயம் கிடக்கிறதா? என்று சுற்றி சுற்றி தேடி எடுத்து கைரேகைகளையும் அழுத்துவிட்டேன். பின் கொலை செய்ய பயன்படுத்திய கத்தி, நகைகள் வைத்திருந்த பைக்குள் நன்றாக கழுவி போட்டுக் கொண்டேன். எனது உடலில் உள்ள ரத்தக்கறைகளை, பாத்ரூமுக்கு சென்று நன்றாக கழுவினேன்.

பின்னர் நகை பையுடன் எதுவும் தெரியாதது போல வெளியே வந்து, எனது காருக்கு நடந்து சென்றேன். அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று விட்டேன். போகும் போதே  போனில் மதுரையில் இருந்த எனது அம்மாவுக்கு கொலை செய்த மேட்டரை சொல்லிவிட்டேன். அம்மா அப்பா பதறினார்கள்.

நான் காரில் தாமிரபரணி ஆற்றுப்பாலம் வழியாக சென்றபோது நகை, கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் வைத்திருந்த பையை ஆற்றில் போட்டுவிட்டு சென்று விட்டேன். என்னை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்தேன். ஆனால் போலீசார் என்னை கண்டுபிடித்து விட்டனர் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios