Asianet News TamilAsianet News Tamil

மீனவர் உயிரிழந்த விவகாரம்; தமிழகம் - கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தம்

தமிழக மீனவர்கள் மீது கர்நாடாக வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், ராஜா என்ற மீனவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து தமிழகம், கர்நாடகா இடையேயான போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

karnataka forest department gun shoot issues transport between tamilnadu and karnataka is stopped
Author
First Published Feb 17, 2023, 3:04 PM IST

தமிழக கர்நாடக எல்லையில் உள்ளது பாலாறு வனப்பகுதி. தமிழக  மீனவர்கள் காவிரியும், பாலாறும் கலக்கும் இடத்தில் பரிசலில் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை பரிசல்களில் சென்ற மீனவர்கள் பாலாற்றில் மீன் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். 

துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பி சிலர் கிராமங்களுக்கு சென்று விட்டனர். ஆனால் கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜாவை மட்டும் காணவில்லை. அவரை அப்பகுதி மக்கள் தேடி வந்தனர். இந்நிலையில், தேடப்பட்டு வந்த ராஜாவின் உடல் பாலாற்றில் சடலமாக இன்று கரை ஒதுங்கி உள்ளது.

கர்நாடகா வனத்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர் பலி

இது தொடர்பாக தகவல் அறிந்த தமிழக காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே ராஜா துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தாரா, தவறுதலாக நீரில் விழுந்து உயிரிழந்தாரா என்ற விவரம் தெரியவரும். துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்திருக்கும் பட்சத்தில் இது தொடர்பாக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

கஞ்சா விற்ற சிறார்களுக்கு நூதன தண்டனை; அரசு மருத்துவமனையில் 1 மாதம் சேவையாற்ற உத்தரவு

மேலும் மீனவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பாலாறு பாதையில் கர்நாடாகா - தமிழகம் இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் காவல் துறையினர் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios