Asianet News TamilAsianet News Tamil

பிரபல ரவுடி முகம் சிதைந்த நிலையில் சல்லி சல்லாய் வெட்டி படுகொலை... அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

காஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் முகம் சிதைந்த நிலையில் ரவுடி கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kanchipuram Rowdy murder...police investigation
Author
Kanchipuram, First Published Jul 2, 2021, 3:19 PM IST

காஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் முகம் சிதைந்த நிலையில் ரவுடி கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் காவித் தண்டலம் கிராமத்தில் எட்டியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் தமிழ்வேந்தன் (25). இவர் அதே பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் முகம் சிதைந்த நிலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சிடைந்தனர். 

kanchipuram Rowdy murder...police investigation

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தமிழ்வேந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

kanchipuram Rowdy murder...police investigation

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தமிழ்வேந்தன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமாக என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios