ஹோலி பண்டிகையின் போது டெல்லியில் ஜப்பானிய பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹோலி கொண்டாட்டத்தில் ஜப்பானிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வீடியோ வெளியாகி உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய பெண் ஒருவரை ஆண்கள் குழுவொன்று பிடித்து துன்புறுத்திய வீடியோ வெளியானது. இதுகுறித்து போலீசார் தெரிவித்த தகவலின்படி, அந்த பெண் ஜப்பானிய சுற்றுலாப் பயணி ஆவார். அவர் தேசிய தலைநகரில் உள்ள பஹர்கஞ்சில் தங்கியிருந்தார். இப்போது வங்கதேசத்திற்குச் சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது குறித்த விவரங்களை அறிய வீடியோ ஆய்வு செய்யப்பட்டு வருவதாக துணை போலீஸ் கமிஷனர் (மத்திய) சஞ்சய் குமார் சைன் தெரிவித்தார்.

“எந்த ஒரு வெளிநாட்டவரிடமும் எந்த விதமான தவறான நடத்தை தொடர்பான புகாரோ அழைப்புகளோ பஹர்கஞ்ச் காவல் நிலையத்தில் பெறப்படவில்லை. சிறுமியின் அடையாளம் அல்லது சம்பவம் குறித்த வேறு எந்த விவரங்களையும் நிறுவ உதவுமாறு ஜப்பானிய தூதரகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது" என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க..ரியல் No.1 இவர்தான்.. நடிகர் விஜயை பின்னுக்கு தள்ளிய அல்லு அர்ஜுன்.! எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

Scroll to load tweet…

சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த வீடியோவில், ஒரு குழு ஆண்கள் ஒரு பெண் மீது வண்ணம் பூசுவதைக் காட்டியது. ஆண்களில் ஒருவர் அவள் தலையில் முட்டையை உடைப்பதையும் இது காட்டுகிறது. பிடிபட்ட சிறுவர்கள் மீது டிபி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். மூவரும் அருகில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியில் வசிப்பவர்கள். மேலும் சட்ட நடவடிக்கை தகுதிகள் மற்றும் சிறுமியின் புகார்களுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Scroll to load tweet…

இந்த வீடியோவை ஆய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்ய டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக டெல்லி மகளிர் ஆணையத்தின் (டிசிடபிள்யூ) தலைவர் ஸ்வாதி மாலிவால் தெரிவித்தார். தேசிய மகளிர் ஆணையமும் இந்த வீடியோவை கவனத்தில் கொண்டு ட்வீட் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு டெல்லி காவல்துறையிடம் அது கேட்டுக்கொண்டது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

இதையும் படிங்க..மொபைல் போனுக்கு ஆசைப்பட்டு.. 4 காம கொடூரர்களால் சீரழிந்த பள்ளி மாணவியின் வாழ்க்கை!! அதிர்ச்சி சம்பவம்