Asianet News TamilAsianet News Tamil

திருவாரூரில் நீதிமன்றத்தில் ஆஜரான நபரின் தலையை சிதைத்து கொடூர கொலை; மர்ம கும்பல் வெறிச்செயல்

திருவாரூர் நீதிமன்றத்தில் கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு திரும்பிச் சென்ற நபரின் தலையை சிதைத்து 5 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளது.

investigative accused killed by unknown persons in thiruvarur district vel
Author
First Published Sep 5, 2023, 3:44 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திப்பிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பிச்சை என்பவரின் மகன் ஓனான் செந்தில். இவர் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் வசித்து வந்தார். ஏற்கனவே இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்ல் ஓனாண் செந்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக திருவாரூர் நீதிமன்றத்திற்கு கும்பகோணம் நால்ரோடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அகிலன் மற்றும் மயிலாடுதுறை பாலையூர்  பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாரதிராஜா ஆகியோருடன் காரில் வந்து விட்டு கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட  நாகலூர் என்கிற இடத்தில் இவர்களது காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு சொகுசு கார் இவர்களது காரின் பக்கவாட்டில் உரசி உள்ளது. இதில் ஓணான் செந்தில் பயணித்த கார் கட்டுப்பாடை இழந்து சாலை ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லி கற்கள் மீது ஏறி நின்று உள்ளது.

இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் மாணவி பலி; வெயிலில் நிற்க வைக்கப்பட்டதால் சோகம்?

அதைத் தொடர்ந்து காரில் இருந்து செந்தில் இறங்கியவுடன் பின்னால் வந்த காரில் இருந்து இறங்கிய ஐந்து நபர்கள் செந்திலை சரமாரியாக தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளனர். இதில் தலை முழுவதுமாக சிதைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அந்த கும்பல் வழக்கறிஞர் அகிலனையும் கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடவாசல் காவல் துறையினர் அகிலனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். செந்தில் உடலை காவல்துறையினர் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மோடி என்ன பண்றாருனு அவருக்கே தெரியாது... ஆனால் திமுக இரு தேர்தல்களையும் சந்திக்க தயார் - துரைமுருகன்

இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இரண்டு தனிப் படைகள் அமைத்து தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதால் முன்விரோதம் காரணமாகவோ அல்லது பழி வாங்கும் நடவடிக்கையாகவோ யாரேனும் அவரை கொலை செய்துள்ளனரா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யும் போதுதான் இந்த கொலையில் தொடர்புடையவர்கள் எத்தனை பேர் எதன் காரணமாக இந்த கொலை நிகழ்த்தப்பட்டது என்பது குறித்து முழு விவரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios