இவர்கள் தான் அந்த படுபாதகர்கள்!! வெளியானது லேட்டஸ்ட் படங்கள்!!
சென்னையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ பெற்ற தாயே குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படுபாதகர்களின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
சென்னையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ பெற்ற தாயே குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படுபாதகர்களின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. சென்னை குன்றத்தூர் மூன்றாம் கட்டளை சேர்ந்த விஜய் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிராமி தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற மகளும் உள்ளனர்.
விஜய் வீட்டில் இருக்கும் நேரம் மட்டும் வீட்டில் இருக்கும் அபிராமி, விஜய் வேலைக்கு சென்றவுடன், நண்பர்கள் வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறி விட்டு, எங்காவது ஊர் சுற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். திருமணம் ஆகி, குழந்தைகள் பெற்ற போதிலும்... இளம் வயது பெண்களை போல் எந்த நேரமும் மேக்கப். கையில் செல்போன் வைத்துக்கொண்டு கடலை, ஸ்கூட்டியில் பறப்பது தான் இவரின் பொழுது போக்கு. அதேபோல, பிரியாணியை விரும்பி சாப்பிடும் அபிராமி, அதனை குன்றத்தூரில் உள்ள பிரபல ஓட்டலில் இருந்து அடிக்கடி ஆர்டர் செய்து, தனது வீட்டிற்கு வரவழைத்து சாப்பிடுவது வழக்கம்.
இவ்வாறு அடிக்கடி பிரியாணி கொண்டு வந்த பிரியாணி கடையின் ஊழியர் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவர் விஜய் வீட்டில் இல்லாத போது தனது கள்ளக் காதலன் சுந்தரத்துடன் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் அபிராமி. இந்த பழக்கம் சுந்தரத்தின் வீட்டிற்க்கே சென்று உல்லாச வாழ்க்கை வாழும் அளவிற்கு மாறியுள்ளது. தனது மனைவிக்கு வேறொருவருடன் கள்ளக் காதல் விவகாரம் அறிந்த கணவர் விஜய் கள்ளத்தொடர்பை கைவிடக்கோரி பலமுறை கூறியும் அபிராமி அதனை ஏற்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
தன்னுடைய காதலனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்த அமிபராமி... தன்னுடைய கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்டார். அதன் படி, குழந்தைகள் குடுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்து, கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு. கேரளா தப்பி செல்ல முயன்றார். ஆனால் இவர் தப்பிக்கும் முன்பே இவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் அபிராமியை கேரளாவிற்கு அனுப்பி விட்டு, எதுவுமே தெரியாதது போல் ஹோட்டலில் வேலை செய்து வந்த சுந்தரத்தையும் பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் தற்போது லேட்டஸ்ட் புகைப்படங்களுக் வெளியாகியுள்ளது.