வீட்டுக்குள் உல்லாசமாக இருந்தபோது வெளிபுறமாக பூட்டிய அக்கம் பக்கத்தினர் … அவமானத்தால் தூக்குப் போட்டுக் கொண்ட கள்ளக் காதல் ஜோடி!!
மைசூர் அருகே , வீட்டிற்குள் உல்லாசமாக இருந்தபோது கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டதால் அவமானமடைந்த கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மைசூரு டவுன் ரமாபாய் அம்பேத்கர் நகரில் வசித்து வந்தவர் சந்தோஷ் குமார். இவருடைய மனைவி அர்ச்சனா. இதேபோல், மைசூரு டவுன் ஜே.பி.நகரை சேர்ந்தவர் சித்தராஜு. இவருடைய மனைவி சுமித்ரா. சந்தோஷ் குமார் வேலைக்கு சென்று வரும்போது அவருக்கும், சுமித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இவர்களுடைய கள்ளக்காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது.
அவர்கள் இவர்கள் இருவரையும் அழைத்து கண்டித்தனர். மேலும் கள்ளக்காதலை கைவிட்டு விடும்படி எச்சரித்தனர். இந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு சந்தோஷ் குமார், தனது கள்ளக்காதலி சுமித்ராவுடன் ஓடிப்போய்விட்டார். இதையடுத்து இருவீட்டாரின் குடும்பத்தினரும் அவர்களை தேடிச்சென்று கண்டுபிடித்தனர்.
பின்னர் ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து பேசி இருவரையும் பிரித்து அவரவர் குடும்பத்துடன் சேர்த்து வைத்தனர்.
ஆனாலும் சந்தோஷ் குமாரும், சுமித்ராவும் தங்களுடைய கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அர்ச்சனா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இதையறிந்த சுமித்ரா, தனது கள்ளக்காதலன் சந்தோஷ் குமாரின் வீட்டிற்கு வந்தார். அதையடுத்து இருவரும் அங்கு உல்லாசம் அனுபவித்தனர். பின்னர் சுமித்ரா தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே தங்கினார்.
இதுபற்றி அறிந்த அர்ச்சனா தனது பெற்றோர் வீட்டில் இருந்து திரும்பி கணவர் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்த அவர், வீட்டிற்குள் தனது கணவரும், அவருடைய கள்ளக்காதலியும் உல்லாசமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் வீட்டை வெளிப்புறமாக பூட்டினார். மேலும் இதுபற்றி அக்கம்பக்கத்தினரிடமும், மைசூரு புறநகர் போலீசாரிடமும் தெரிவித்தார். இதற்கிடையே இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். சம்பவம் குறித்து அறிந்த போலீசாரும் அங்கு வந்தனர். அதுமட்டுமல்லாமல் சுமித்ராவின் கணவர் சித்தராஜுவும் அங்கு வந்துவிட்டார்.
இதனால் வசமாக சிக்கிக் கொண்ட கள்ளக்காதல் ஜோடியான சந்தோஷ் குமாரும், சுமித்ராவும் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் அவர்கள் அவமானத்தால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரின் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பு வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.