Asianet News TamilAsianet News Tamil

மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசம்... நேரில் பார்த்த கணவர்... இறுதியில் நேர்ந்த பயங்கரம்..!

மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

illegal love...Worker Murder..Husband arrest
Author
Coimbatore, First Published Dec 19, 2020, 5:41 PM IST

மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் காரமடை வெள்ளியங்காடு அருகே உள்ள அன்சூரை சேர்ந்தவர் காளி (58). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும், 3 மகன்கள், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காளிக்கும் அதே பகுதியை சேர்ந்த தர்மர் என்பவரது மனைவி கவிதா (40) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

illegal love...Worker Murder..Husband arrest

தர்மர் வேலைக்கு செல்லும் நேரத்தில் காளி அவரது வீட்டுக்கு சென்று கவிதாவுடன் உல்லாசமாக இருந்து வந்தார். இது அக்கம் பக்கத்தினர் மூலமாக தர்மருக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். மேலும் காளியுடனான கள்ளக்காதலை கைவிடுமாறு எச்சரித்தார். ஆனால் இதை எதையும் காதில் வாங்கி கொள்ளாத கவிதா, காளியை தனது வீட்டுக்கு அழைத்து ஜாலியாக உல்லாசம் அனுபவித்து வந்தார். நேற்று காலை தர்மர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். தனது கணவர் வெளியே சென்று விட்டதாக காளியிடம், கவிதா கூறினார். இதனையடுத்து மதியம் 1 மணியளவில் காளி, கவிதாவின் வீட்டுக்கு சென்றார்.

அங்கு 2 பேரும் ஜாலியாக உல்லாசமாக இருந்தனர். மாலை 4 மணியளவில் தர்மர் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனையடுத்து அவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். வீட்டிற்குள் தனது மனைவியுடன் காளி உல்லாசமாக இருப்பது கண்டு ஆத்திரம் அடைந்தார்.உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்ற அவர் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் காளியின் தலையில் தாக்கினார். 

illegal love...Worker Murder..Husband arrest

இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவஇடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் அவரது மனைவியையும் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பித்து சென்றுவிட்டார். இது தொடர்பாக உடனே போலீசாருக்க தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, கொலை செய்த  தர்மரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios