Asianet News TamilAsianet News Tamil

என்னோடு ஓயாமல் உல்லாசமாக இருந்துட்டு.. வேற ஒருத்திய கல்யாணம் பண்ணுவியா.. கதறும் பெண்.!

தனியார் நகைக்கடை அதிபருடன் எனக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது எங்கள் கடையில் பணிபுரிந்த வாலிபருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவருக்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

illegal love... Women protest in front of youth home
Author
Ariyalur, First Published Jun 25, 2022, 12:47 PM IST

கடந்த 13 ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்து விட்டு இப்போது வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயன்ற இளைஞர் வீட்டு முன்பு பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயக்கொண்டத்தை சேர்ந்த 35 வயது வாலிபர் தனியார் வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். இந்நிலையில்,  இவருடைய வீட்டின் முன்பு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 44 வயது பெண் ஒருவர் நேற்று அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அந்த வாலிபரின் குடும்பத்தாருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

இதையும் படிங்க;- "நான் உன்னுடைய பொண்ணுப்பா.. இதெல்லாம் தப்பு".. தலைக்கேறிய போதையால் மகளை பலாத்காரம் செய்த தந்தை.!

இதுதொடர்பாக தகவலறிந்த ஜெயக்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு  வந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பெண் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். ஜெயங்கொண்டத்தில் தனியார் நகைக்கடை அதிபருடன் எனக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது எங்கள் கடையில் பணிபுரிந்த வாலிபருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவருக்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததையடுத்து என்னை விவகாரத்து செய்துவிட்டார்.  எனது கணவர் கொடுத்த பணம் நகைகளை அவரிடம் கொடுத்தேன்.  பின்னர், இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம். இந்நிலையில், அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்வதாக அறிந்தேன். எனவே அந்த வாலிபர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். மேலும், என்னிடம் வாங்கிய ரூ.35 லட்சம் மற்றும் 70 பவுன் நகைகளை என்னிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என கோரி தர்ணாவில் ஈடுபட்டதாக கூறினர். இதனையடுத்து, அந்த பெண்ணை சமாதானம் செய்த போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர், அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க;-  அடிப்பாவி.. உல்லாசத்துக்கு இடையூறு.. தாலி கட்டிய கணவரையே கூலிப்படை ஏவி போட்டு தள்ளிய வெறி பிடித்த மனைவி.!

Follow Us:
Download App:
  • android
  • ios