Asianet News TamilAsianet News Tamil

பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு.. கள்ளக்காதலியை உளியால் அடித்து கொன்று கொடூரமாக எரித்த 58 வயது கிழவன்..!

சென்னையிலுள்ள கண்ணம்மா பேட்டை பகுதியில் ஜெயலட்சுமியும் ஏழுமலையும் தனி வீடு எடுத்து இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர், தனக்கு தெரியாமல் ஜெயலட்சுமி பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனால், தனக்கும் ஜெயலட்சுமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

illegal love...women murder
Author
Villupuram, First Published Aug 26, 2021, 6:28 PM IST

தனக்கு தெரியாமல் ஜெயலட்சுமி பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததல் கொலை செய்தேன் என போலீசில் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆனத்தூர் செல்லும் சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் திருத்துறையூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் கடந்த சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் காலில் மெட்டி உடன் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை உடலை கைப்பற்றி பிரேத பரிசேதானைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சம்பவம் இடத்தில் எரிந்த நிலையில் கிடந்த செல்போனை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

illegal love...women murder

இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ரெட்டி குப்பத்தைச் சேர்ந்த ஏழுமலை(58) என்பவரை கைது செய்துள்ளனர். இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில்  பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள ஒரு தனியார் கூரியர் அலுவலகத்தில் காவலராக வேலை பார்த்து வருவதாகவும், இவருக்கு அமுதா என்ற மனைவியும் ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவரும் ரெட்டி குப்பத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் நாவல் மருதூரை சேர்ந்த 51 வயது ஜெயலட்சுமி என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஜெயலட்சுமியின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனிமையில் இருந்த ஜெயலட்சுமி சென்னையில் மாம்பலம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

இதனால் ஏழுமலை ஜெயலட்சுமி இருவரும் சென்னையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் சென்னையிலுள்ள கண்ணம்மா பேட்டை பகுதியில் ஜெயலட்சுமியும் ஏழுமலையும் தனி வீடு எடுத்து இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர், தனக்கு தெரியாமல் ஜெயலட்சுமி பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனால், தனக்கும் ஜெயலட்சுமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

அதனால் ஜெயலட்சுமியை கொலை செய்வது என திட்டமிட்டேன். அதன்படி கடந்த 3ஆம் தேதி பண்ருட்டி அருகில் உள்ள திருத்துறையூர் கிராமத்தில் எனது மாமனார் இறந்து போனார் அவரது கரும காரியத்திற்கு செல்ல வேண்டும் என ஜெயலட்சுமியிடம் பொய் கூறி ஏமாற்றி  சென்னையில் இருந்து பஸ் மூலம் அவரை அழைத்து வந்தேன். அரசூர் பஸ் நிலையத்தில் இருவரும் இறங்கினோம். அங்கிருந்து ஆனத்தூர்  வழியாக நடந்து சென்றோம்.

illegal love...women murder

அப்படி செல்லும் போது காட்டுப்பகுதியில் ஜெயலட்சுமிக்கு தெரியாதவாறு அவரது பின்புறமிருந்து மரக்கட்டையால் அவரது மண்டையில் தாக்கினேன். பின்னர் கையில் வைத்திருந்த இரும்பு உளியால் அவரது வயிற்றில் குத்தியதில் ஜெயலட்சுமி ரத்த வெள்ளத்தில் துடிதடித்து உயிரிழந்தார். பின்னர், அங்கு கிடந்த பனமட்டை மற்றும் விரகுகளை சேகரித்து ஜெயலட்சுமி மீது போட்டு தீவைத்தேன் என்று கூறினார். இதனையடுத்து, ஏழுமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios