Asianet News TamilAsianet News Tamil

அரை நிர்வாணத்துடன் அடிக்கடி வீடியோ கால்.. தடையாக இருந்த பொண்டாட்டியை போட்டு தள்ளிய கணவர்?

சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் வினோத். இவருடைய மனைவி ஹேமாவதி (25). இவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், திருமணமான 6 மாதங்களாகவே கணவன்-மனைவிக்குள் இடையே அடிக்கடி வரதட்சணை தொடர்பான தகராறு இருந்து வந்துள்ளது. 

illegal love... woman brutally murdered
Author
Chennai, First Published Nov 29, 2021, 3:20 PM IST

சென்னையில் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் வினோத். இவருடைய மனைவி ஹேமாவதி (25). இவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், திருமணமான 6 மாதங்களாகவே கணவன்-மனைவிக்குள் இடையே அடிக்கடி வரதட்சணை தொடர்பான தகராறு இருந்து வந்துள்ளது. 

illegal love... woman brutally murdered

இந்நிலையில், கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு கூட காவல் நிலையத்தில் இவர்களுடைய பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. பின்னர், இருவீட்டாரையும் அழைத்து சமாதானம் செய்து காவல்துறை அனுப்பியுள்ளனர். எதார்த்தமாக கணவரின் செல்போனை எடுத்து பார்த்த போது அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வினோத் பல பெண்களுடன் வீடியோ காலில் பேசுவதும் அரை நிர்வாணத்துடன் வீடியோ கால் செய்வதும் தெரியவந்துள்ளது. ஒரு கட்டத்தில் பிரச்சனை  அதிகரித்தது. இதனிடையே, நேற்று மதியம் 12 மணி அளவில் ஹேமாவதி வழுக்கி விழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாக அக்கம் பக்கத்தினர் ஹேமாவதியின் அண்ணனுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். 

இதனால், பதறி அடித்துக்கொண்டு வந்த அண்ணன்  ஹேமாவதியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றள்ளார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஹேமாவதியின் அண்ணன் என் தங்கையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, கணவர் வினோத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

illegal love... woman brutally murdered

இது தொடர்பாக ஹேமாவின் அண்ணன் ஜானகிராமன் கூறுகையில்;- தனது தங்கையை வரதட்சணை கொடுமையால் திருமணமான முதல் தொந்தரவு செய்து வந்ததாகவும், வினோத்திற்கு பல பெண்களிடம் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.  மேலும் இதற்கெல்லாம் என் தங்கை உடந்தையாக இல்லை என்ற காரணத்திற்காக நேற்று கழுத்தை நெரித்து கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் தான் ஹேமாவதி உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும். 

Follow Us:
Download App:
  • android
  • ios