Asianet News TamilAsianet News Tamil

கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 5 மாத கர்ப்பிணி மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவர்..!

சிலம்பரன் வேலைக்கு சென்ற இடத்தில் ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதுதொடர்பாக சிலம்பரசனுக்கும், மனைவி பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோல், நேற்று முன்தினம் மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. 

illegal love... Pregnant wife murder
Author
Vellore, First Published Sep 6, 2021, 5:43 PM IST

திருப்பத்தூரில் கள்ளக்காதலை தட்டி கேட்ட கர்ப்பிணி மனைவியை கொலை செய்து விட்டு, தற்கொலை என நாடகமாடிய கணவன் மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியைச் சேர்ந்தவர் சிலம்பரன்(25). நாட்றம்பள்ளி அடுத்த அண்ணசாகரம் பகுதியில் உள்ள ஊது வத்தி கம்பெனியின் தொழிலாளி. இவரது மனைவி பிரியங்கா(23). இவர்களுக்கு 3 வயதில் தர்ஷன் என்ற மகனும், 11 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். தற்போது பிரியங்கா மீண்டும் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். 

illegal love... Pregnant wife murder

இந்நிலையில், சிலம்பரன் வேலைக்கு சென்ற இடத்தில் ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதுதொடர்பாக சிலம்பரசனுக்கும், மனைவி பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோல், நேற்று முன்தினம் மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. 

ஒருகட்டத்தில் பிரச்சனை அதிகமாகவே  சிலம்பரசன், அவரது தந்தை ரவிசந்திரன் மற்றும் தாயார் கலா ஆகியோர் சேர்ந்து பிரியங்காவை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடியுள்ளனர். பின்னர் பிரியங்கா தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தாருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரியங்கா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

illegal love... Pregnant wife murder

இதனிடையே, தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் சிலம்பரன், தந்தை ரவிசந்திரன், தாயார் கலா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios