Asianet News TamilAsianet News Tamil

நெல்லையில் பயங்கரம்.. தாயும், மகளும் கள்ளக்காதல்.. ஆத்திரத்தில் நர்ஸை துடிதுடிக்க கொன்ற புருஷன், மருமகன்..!

செவிலியரான ராஜலட்சுமிக்கும் வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை அவரது கணவர் வேலாயுதம் கண்டித்தபோதும் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

illegal love... Nurse murdered
Author
Thirunelveli, First Published Jul 18, 2021, 6:51 PM IST

கள்ளக்காதல் விவகாரத்தில் நெல்லை அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த செவிலியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மூலைக்கரைப்பட்டி பொட்டல் தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி ராஜலட்சுமி(45). நெல்லை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களது மகள் அனிதா(23). அனிதாவின் கணவர் அபிமன்யு(33). தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூலைக்கரைப்பட்டி அடுத்த கல்லத்தியில் வசித்து வந்தனர்.

illegal love... Nurse murdered

இதனிடையே, அனிதாவுக்கு திருமணத்திற்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை மறைத்து  உறவினரான அபிமன்யுக்கு திருமணம் முடித்து கொடுத்துள்ளனர். திருமணமாகி இரு குழந்தைகள் பெற்ற பிறகும் அனிதாவுக்கும் அந்த வாலிபருடன் தொடர்பு நீடித்து வந்துள்ளது. இதையறிந்த அபிமன்யு மனைவியை கண்டித்த நிலையில் அனிதா கணவர் குழந்தைகளை விட்டு விட்டு தாய் வீட்டுக்கு  சென்றுவிட்டார். 

இதேபோல், செவிலியரான ராஜலட்சுமிக்கும் வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை அவரது கணவர் வேலாயுதம் கண்டித்தபோதும் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் மூலைக்கரைப்பட்டி சென்ற அபிமன்யு மனைவியை குடும்ப நடத்த வருமாறு அழைத்தார். ஆனால், அவர் வர மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ராஜலட்சுமி மருமகனை தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அபிமன்யு கடந்த 15ம் தேதி  நாங்கநேரி அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வரமறுப்பதாகவும், மாமியாரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு மூலைக்கப்பட்டிக்கு மீண்டும் சென்ற அபிமன்யு மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்தபோது தகராறு ஏற்பட்டது. இதில், மாமியார் ராஜலட்சுமி, மருமகனை அவதூறாக பேசினார். அதனால், ஆத்திமடைந்த அபிமன்யு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜலட்சுமியை சரமாரியாக வெட்டினார். அப்போது, மாமனால் வேலாயுதமும் வெட்டினாராம். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

illegal love... Nurse murdered

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வேலாயுதம், அபிமன்யு ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios