Asianet News TamilAsianet News Tamil

இளைஞருடன் மனைவி கள்ளக்காதல்.. கைவிடுமாறு தாய்க்கு அட்வைஸ் செய்த மகள்.. ஆத்திரத்தில் கணவர் செய்த பயங்கரம்..!

வேலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

illegal love muder
Author
Vellore, First Published Jun 8, 2020, 5:24 PM IST

வேலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் அருகே உள்ள கம்மவான்பேட்டையை சேர்ந்தவர் செல்வம் (42). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். தற்போது தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (36) தம்பதிக்கு கடந்த 20 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகள், மகன் உள்ளனர். சித்ராவுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

illegal love muder

மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் காலபோக்கில் கணவருக்கு தெரியவந்தது. இதுபற்றி தெரிந்த செல்வம் மனைவியை கண்டித்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று சித்ராவிடம் அவருடைய மகள் கள்ளக்காதலை கைவிடும்படி கூறினார். அப்போது ஆத்திரமடைந்த சித்ரா அவரது மகளை தாறுமாறாக அடித்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதுபற்றி அவருடைய மகள் செல்போன் மூலம் தந்தை செல்வத்திற்கு தகவல் தெரிவித்தார். 

illegal love muder

இரவு பணியில் இருந்து வந்த செல்வம் இதுபற்றி கேட்டதால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்வம் வீட்டில் இருந்த கட்டையால் சித்ராவின் தலையில் சரமாரியாக தாக்கினார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, கணவர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios