கள்ளக்காதலி வீட்டில் கணவர் உல்லாசம்... படுக்கை அறையிலேயே புகுந்து வடிவேல் பாணியில் புரட்டி எடுத்த மனைவி..!
கள்ளக்காதலி வீட்டில் உல்லாசமாக இருந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி சாலையில் புரட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதலி வீட்டில் உல்லாசமாக இருந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி சாலையில் புரட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஆழ்வார் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவருக்கு அனிதா என்பவருடன் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கோபாலுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், 2 ஆண்டுகளுக்கு முன்னரே அனிதாவின் உறவினர்கள் ஊர்ப் பஞ்சாயத்தில் புகார் செய்தார்கள். ஆனால், அதன் பிறகும் கோபாலின் லீலைகள் அடங்கவில்லை.
இந்நிலையில், சுபாஷ் நகர் என்ற இடத்தில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். இதனை அறிந்ததும், புயலாக மாறினார் அனிதா. விளைவு, தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு, கோபாலும் அந்தப் பெண்ணும் தங்கியிருந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தார். அப்போதும். இருவரும் அரை நிர்வாணத்தில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையடுத்து, கணவரையும் அந்தப் பெண்ணையும் பார்த்து, ஆவேசமடைந்த அனிதா, சரமாரியாக தாக்கத் தொடங்கினார்.
பின்னர், கணவரை சாலையில் இழுத்து வந்து பொதுமக்கள் முன்னிலையில் தாக்கத் தொடங்கினார். அதில் கோபால் அணிந்திருந்த டிரவுசர் கழன்று விழும் அளவுக்கு வெளுத்து வாங்கினார். இதனையடுத்து, இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.