Asianet News TamilAsianet News Tamil

கள்ளக்காதலுக்கு இடையூறு... கணவனை விஷம் வைத்து போட்டித்தள்ளிய மனைவி

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுருளிபட்டி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (27) லாரி டிரைவர். அவரது மனைவி கலைமணி (19). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ஒன்றரை வயதில், ஆண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 8ம் தேதி ஈஸ்வரன் திடீரென இறந்துவிட்டார். குடிப்பழக்கம் உள்ள ஈஸ்வரன் அதிகமகா மது குடித்ததால், அவர் இறந்தாக கலைமணி உறவினர்களிடம் கூறி அழுதார்.

illegal love... husband murder
Author
Tamil Nadu, First Published Dec 7, 2018, 5:24 PM IST

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுருளிபட்டி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (27) லாரி டிரைவர். அவரது மனைவி கலைமணி (19). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ஒன்றரை வயதில், ஆண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 8ம் தேதி ஈஸ்வரன் திடீரென இறந்துவிட்டார். குடிப்பழக்கம் உள்ள ஈஸ்வரன் அதிகமகா மது குடித்ததால், அவர் இறந்தாக கலைமணி உறவினர்களிடம் கூறி அழுதார்.

கணவர் இறந்த பிறகு கலைமணி, தனது குழந்தையை மாமனாரிடம் கொடுத்து விட்டு, வீட்டில் இருந்த 3 சவரன் நகை, ரூ.10 ஆயிரத்தை எடுத்து கொண்டு தலைமறைவானார். இதனால், அதிர்ச்சியைந்த உறவினர்கள், அவரை பல இடங்களில் தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. பின்னர், அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி (26) என்ற வாலிபருடன், கலைமணி சுற்றிதிரிவது தெரியவந்தது. இதனால் கலைமணி மீது உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது. illegal love... husband murder

இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசில், புகார் செய்தனர். மேலும், ஈஸ்வரன் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதனை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் டிஎஸ்பி சீமைச்சாமி, தாசில்தார் உதயராணி, டாக்டர் அருண்குமார் ஆகியோர் முன்னிலையில் ஈஸ்வரன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் வி‌ஷம் வைத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. illegal love... husband murder

இதையடுத்து போலீசார், தலைமறைவாக இருந்த கலைமணியை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை காவல் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர். அதில், கலைமணிக்கும், அழகர்சாமிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், அதற்கு இடையூறாக இருந்த கணவர் ஈஸ்வரனுக்கு, உணவில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் கலைமணி, அவரது காதலன் அழகர்சாமியை கைது செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios