Asianet News TamilAsianet News Tamil

கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி.. வசமாக சிக்கினார்..!

ராஜாவின் குடும்பத்தினர் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக  புகார் தெரிவித்தனர். பின்னர், சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனையில் ராஜா கொலை செய்யப்பட்டதற்கான தடயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

illegal love... husband murder in coimbatore
Author
Coimbatore, First Published Dec 27, 2021, 1:45 PM IST

கள்ளக்காதலுக்காக கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.  இதற்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலனும் கைது செய்யபட்டார்.

கோவை கவுண்டம்பாளையம் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் ராஜா (36). மெக்கானிக். இவரது மனைவி ரீனா (36). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ரீனா துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

illegal love... husband murder in coimbatore

இந்நிலையில், ராஜாவின் குடும்பத்தினர் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக  புகார் தெரிவித்தனர். பின்னர், சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனையில் ராஜா கொலை செய்யப்பட்டதற்கான தடயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 இதையடுத்து ராஜாவின் மனைவி ரீனாவிடம் போலீசார் கிடுக்குப்படி விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்க்கும் ரீனாவின் அத்தை மகன் சதீஷ் (39) என்பவர் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். ரீனாவுக்கும், சதீசுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை அறிந்த ராஜா, பலமுறை மனைவியை கண்டித்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இது தொடர்பாக தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

illegal love... husband murder in coimbatore

அப்போது அங்கு வந்த சதீஷ், துப்பட்டாவால் ராஜாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். கொலையை மறைப்பதற்காக ரீனா தனது கணவன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரிடம் நாடகமாடியது அம்பலமானது. சந்தேக மரணத்தை கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார் கள்ளக்காதல் ஜோடி ரீனா, சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios