Asianet News TamilAsianet News Tamil

தள்ளாத வயதில் கள்ளக்காதல் தேவையா? ஆத்திரத்தில் பெற்ற மகன் செய்த பயங்கர செயல்..!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செல்லப்பகவுண்டன் வலக நல்ல மூப்பனூர் பிரிவு பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுணன் (55). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (50). தம்பதியருக்கு செந்தில்குமார் (35) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். 

illegal love...father murder in erode
Author
Erode, First Published Sep 12, 2021, 4:52 PM IST

ஈரோடு அருகே கள்ளக்காதலிக்கு சொத்தை எழுதி வைக்க முடிவு செய்த தந்தையை மகனே கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செல்லப்பகவுண்டன் வலக நல்ல மூப்பனூர் பிரிவு பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுணன் (55). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (50). தம்பதியருக்கு செந்தில்குமார் (35) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். செந்தில்குமார் திருமணமாகி தந்தை வீட்டின் அருகே தனி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், அர்ச்சுணனுக்கும் வேறு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இது தொடர்பாக பலமுறை தந்தையை மகன் கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை.

illegal love...father murder in erode

இந்நிலையில், நேற்றிரவு கள்ளக்காதலி வீட்டில் சென்று விட்டு வந்த தந்தையை கண்ட மகனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இதனால் அர்ச்சுணனுக்கும், மகன் செந்தில்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செந்தில்குமார் அரிவாளை எடுத்துக்கொண்டு தந்தையை சரமாரியாக வெட்டினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். 

illegal love...father murder in erode

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையை மகனே வெட்டிக்கொன்ற சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios