Asianet News TamilAsianet News Tamil

இந்த வயசுல கள்ளக்காதல் தேவையா? தாயுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த மகன்.. இறுதியில் நேர்ந்த பயங்கரம்..!

தாயுடன் கள்ளக்காதல் வைத்திருந்த எலக்ட்ரீசியன் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

illegal love... Electrician Murder
Author
Virudhunagar, First Published Dec 1, 2020, 1:57 PM IST

தாயுடன் கள்ளக்காதல் வைத்திருந்த எலக்ட்ரீசியன் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு மலையடிபட்டியைச் சேர்ந்தவர் ராமர் (52), எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மாடசாமி. இவரது மனைவி மாரியம்மாள் (45). இவர்களுக்கு மதன் (25) உட்பட 4 மகன்கள் உள்ளனர். மாடசாமி பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் மாரியம்மாள் மகன்களுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார்.

illegal love... Electrician Murder

இந்நிலையில், பக்கத்து வீடு ராமருக்கும் மாரியம்மாள் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரம் நாளடைவில் மாரியம்மாளின் மகனுக்கு தெரியவர ராமரை கண்டித்துள்ளார். ஆனாலும், ராமர் கள்ளக்காதலை கைவிடாமல் இருந்து வந்துள்ளார். 

இதனால், ஆத்திரத்தில் இருந்த மதன் நேற்று இரவு ராமர் தனது வீட்டின் வாசலில் உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு மாடசாமி மதன் வந்தார். ராமரை பார்த்ததும் அவருக்கு மேலும் ஆத்திரம் ஏற்பட்டது. பலமுறை கண்டித்தும் ஏன் எனது தாயாருடன் பழகுகிறாய் என கேட்டார். இதற்கு கள்ளக்காதலை கைவிடமுடியாது என ராமர் கூறியுள்ளார். பின்னல், கோபத்தின் உச்சிக்கு சென்ற மதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமரை சரமாரியாக பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமர் சம்பவ இடத்திலேயே  துடிதுடித்து உயிரிழந்தார்.

illegal love... Electrician Murder

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராமர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, மதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தால் கொலை நடைபெற்ற விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios