30 வயது வாலிபருடன் 40 வயது பெண் லாட்ஜில் இரவு முழுவதும் உல்லாசம்.. இறுதியில் கள்ளக்காதல் ஜோடி எடுத்த முடிவு.!
இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் தங்கி இருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
புதுச்சேரியில் லாட்ஜில் இரவு முழுவதும் உல்லாசமாக இருந்து விட்டு கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தறடகொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவில் பகுதியில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. நேற்று காலை இந்த விடுதிக்கு 30 வயதுதக்க ஒரு ஆணும், 40 வயதுதக்க பெண்ணும் வந்தனர். அவர்கள் வேலூர் மாவட்டம் கனகாம்புதூர், மோகன்ராஜ் (30) என்ற முகவரியை கொடுத்து விடுதியில் அறை எடுத்து தங்கினர். காலையில் விடுதியை விட்டு வெளியே சென்ற இவர்கள் புதுச்சேரியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு மாலையில் விடுதி திரும்பினர்.
இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் தங்கி இருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது மின் விசிறியில் மோகன்ராஜிமும், அந்த பெண்ணும் மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் சடலமாக கிடந்தனர். இதனையத்து, மோகன்ராஜை பரிசோதனை செய்த போது காட்பாடியில் இருந்து சென்னை வந்ததற்கான ரயில் டிக்கெட் இருந்தது. இதனையடுத்து, இருவரிடன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் ஜோடியாக இருக்கலாம் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.