Asianet News TamilAsianet News Tamil

லாட்ஜில் ரூம் போட்டு கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்.. அதிர்ந்து போன போலீஸ்..!

அறையை காலி செய்ய வேண்டிய நேரம் கடந்த பின்னரும் அவர்கள் கீழே வராததால் தங்கும் விடுதி ஊழியர்கள் அவர்கள் தங்கியிருந்த அறைக்கதவை தட்டினார்கள். ஆனால், அவர்கள் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது சபரீசன் மற்றும் நிஷா நந்தினி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

illegal love couple commits suicide...police investigation
Author
Trichy, First Published Jan 1, 2022, 3:39 PM IST

துறையூரில் உள்ள தனியார் விடுதி அறையில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர்  பேருந்து நிலையம் அருகே  தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் திருவண்ணாமலை மாவட்டம் ஏம்பலம் நரிக்குறவர் தெருவை சேர்ந்த சபரீசன் (21) மற்றும் தாம்பரம் கடம்பேரி பகுதியை சேர்ந்த நிஷாநந்தினி (20) ஆகியோர் கடந்த 29-ம் தேதி அறை எடுத்து தங்கி இருந்தனர்.நேற்று காலை தங்கும் விடுதி ஊழியர்கள் அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளனர். மதிய உணவு அவர்களே வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளனர்.

illegal love couple commits suicide...police investigation

இந்நிலையில், அறையை காலி செய்ய வேண்டிய நேரம் கடந்த பின்னரும் அவர்கள் கீழே வராததால் தங்கும் விடுதி ஊழியர்கள் அவர்கள் தங்கியிருந்த அறைக்கதவை தட்டினார்கள். ஆனால், அவர்கள் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது சபரீசன் மற்றும் நிஷா நந்தினி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து தங்கும் விடுதி ஊழியர்கள் துறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், நிஷா நந்தினி, சபரீசன் ஆகியோர் கள்ளக்காதல் ஜோடி என்பதும், இவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

illegal love couple commits suicide...police investigation

மேலும், தாம்பரம் போலீஸ் நிலையத்தில் நிஷா நந்தினியின் கணவர் ரஞ்சித் தனது மனைவியை காணவில்லை என்று புகார் கொடுத்து இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios