கள்ளக்காதலியுடன் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த காரணத்தால் 2 வயது குழந்தையை செல்போனால் தாக்கியதுடன் கையை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கள்ளக்காதலியுடன் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த காரணத்தால் 2 வயது குழந்தையை செல்போனால் தாக்கியதுடன் கையை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அரக்கோணத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி(25). கணவன் சரவணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். தம்பதிக்கு ஜெயஸ்ரீ என்ற 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், மகாலட்சுமிக்கும் சென்னை கொரட்டூர் பெரியார் நகரை சேர்ந்த அஜய்குமார் (27) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர் ஆவின்பால் பண்ணையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், மகாலட்சுமி தனது குழந்தையுடன் கொரட்டூரில் உள்ள வாடகை வீட்டில் அஜய்குமாருடன் குடும்பம் நடத்தியுள்ளார். இவர்களின் உல்லாசத்துக்கு குழந்தை இடையூறாக இருந்துள்ளது.இதன் காரணமாக அஜய்குமார் அந்த குழந்தையை அடித்து சித்ரவதை செய்துள்ளார். இந்நிலையில், கடந்த 28ம் உல்லாசத்தின் போது இடையூறு ஏற்படுத்தியது. இதனால், ஆத்திரம் அடைந்த அவர் செல்போனால் குழந்தையின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மகாலட்சுமி கணவனிடம் தகராறு செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். 

இதனையடுத்து, குழந்தையை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜய்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.