Asianet News TamilAsianet News Tamil

எவ்வளவு சொல்லியும் கள்ளக்காதலை கைவிட மறுத்த அக்கா.. சுவரில் மோதி கொலை செய்த தம்பி.. போலீசில் பகீர் தகவல்..!

எனது மாமாவுக்கும் அக்காவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதை கேட்டபோது எனது அக்கா, வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளது தெரியவந்தது. அவரை நானும், மாமாவும் பலமுறை கண்டித்தோம். ஆனால் அவர் கைவிடவில்லை. 

illegal love... brother who killed his sister
Author
Thiruvannamalai, First Published Sep 22, 2021, 11:45 AM IST

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த அக்காவை தலைமுடியை பிடித்து இழுத்து சுவரில் மோதி கொலை செய்ததாக தம்பி போலீசில் சரணடைந்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(35). இவர் தனது அக்கா மகளான ராஜேஸ்வரி என்பவரை 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கோவேஷ்கண்ணன்(4) என்ற மகன் உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கணவர் வெங்கடேசன்  தங்கை வீட்டிற்கு சென்றுவிட்டார். 

illegal love... brother who killed his sister

கடந்த 18ம்தேதி இரவு ராஜேஸ்வரியும், அவரது சகோதரர் பிரபாகரனும் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கினர். மறுநாள் காலை ராஜேஸ்வரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் ராஜேஸ்வரியின் தம்பி பிரபாகரன்(24) நேற்று மாலை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அப்போது, அவர் அளித்த வாக்குமூலத்தில்;- எனது மாமாவுக்கும் அக்காவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதை கேட்டபோது எனது அக்கா, வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளது தெரியவந்தது. அவரை நானும், மாமாவும் பலமுறை கண்டித்தோம். ஆனால் அவர் கைவிடவில்லை. 

இதனிடையே, சில வாரங்களுக்கு முன்பு, எனது அக்கா வேறு ஒருவருடன் பேசியதை கண்ட எனது மாமா, சண்டைபோட்டு விட்டு அவரது தங்கை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையறிந்த நான், கடந்த 10 நாட்களாக எனது அக்காவுக்கு அறிவுரை கூறி வந்தேன். கடந்த 18ம் தேதியும் அக்கா வீட்டிற்கு வந்த நான், கள்ளத்தொடர்பால் நமக்கும், இருவரின் குடும்பத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படும்.

illegal love... brother who killed his sister

இங்கு இருக்க பிடிக்கவில்லையென்றால் நமது சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் சங்கராபுரத்துக்கு சென்றுவிடலாம் என அழைத்தேன். ஆனால் எனது அக்கா வரவில்லை. பலமுறை வற்புறுத்தியும் பிடிவாதமாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், அவரை பயமுறுத்துவதற்காக அவரது தலைமுடியை பிடித்து இழுத்து சுவரில் மோதினேன். மேலும் கழுத்தை இறுக்கினேன். உடனே அவர் மயங்கி விழுந்தார். மறுநாள் காலைதான் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.  இதையடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios