Asianet News TamilAsianet News Tamil

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க 2 கள்ளக்காதலர்கள் போட்டா போட்டி.. அப்புறம் நடந்த கூத்தை மட்டும் பாருங்களே.!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூரை சேர்ந்தவர் இந்திரா. கணவனை இழந்தவர். இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த சில ஆண்டுகளாக வாணியம்பாடியில் தங்கி அங்கு கூலி வேலை செய்து வந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சேகர்(38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

illegal love...  Attack girlfriend.. Youth Arrest
Author
Ranipet, First Published Nov 2, 2021, 7:24 PM IST

ஒரு பெண்ணுக்கு இரண்டு பேர் போட்டியிட்ட தகராறில் கள்ளக்காதலி, கள்ளக்காதலன் சரமாரி தாக்கப்பட்டனர். இது தொடர்பாக மற்றொரு  கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூரை சேர்ந்தவர் இந்திரா. கணவனை இழந்தவர். இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த சில ஆண்டுகளாக வாணியம்பாடியில் தங்கி அங்கு கூலி வேலை செய்து வந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சேகர்(38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

illegal love...  Attack girlfriend.. Youth Arrest

இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக வேலையில்லாததால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்திரா மீண்டும் சொந்த ஊரான தாழனூருக்கு வந்துவிட்டார். அதன் பின்னர் ஆற்காடு அடுத்த கிருஷ்ணாவரத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் டிராக்டரில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.அப்போது சீனிவாசனுக்கும் இந்திராவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. சீனுவாசன் இரவில் வீட்டிற்கு அடிக்கடி வந்து இந்திராவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

அதேபோல் நேற்று முன்தினம் இரவு சீனிவாசன் வீட்டிற்கு சென்றார். சிறிது நேரத்தில் வாணியம்பாடி சேர்ந்த மற்றொரு கள்ளக்காதலனான கட்டிட மேஸ்திரி சேகர்.  இந்திராவை சந்திக்க தாழனூர் வந்தார். அப்போது வீட்டில் சீனிவாசன் இருப்பதை கண்ட இருப்பதை கண்ட அவர் தகராறு செய்தார். இதனை எதிர்பாராத சீனிவாசனும், இந்திராவும் சேகரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.  இதனால், மேலும் ஆத்திரமடைந்த சேகர் அங்கிருந்த இரும்பு ஊதுகுழலால் சீனிவாசன், இந்திராவை இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது இருவரும் படுகாயமடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

illegal love...  Attack girlfriend.. Youth Arrest

இருவரையும் தாக்கிய சேகரை மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios