என்கூட உல்லாசம் குடித்தனம்.. மத்தவ கூட கல்யாணமா? ஆத்திரத்தில் 42 வயது அதிமுக பெண் நிர்வாகியின் கேவலமான செயல்
தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ததால், ஆத்திரமடைந்த அதிமுக பெண் நிர்வாகி வாலிபரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ததால், ஆத்திரமடைந்த அதிமுக பெண் நிர்வாகி வாலிபரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் பிரதீப் (24), டிரைவர். இவரது வீடு அருகே வசிப்பவர் ராஜேஷ் மனைவி பிரமிளா (42). இவர், கொடைக்கானல் அதிமுக மகளிர் அணியில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். கணவர் ராஜேஷ் 6 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இதனையடுத்து, பிரதீப், பிரமிளா இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் கணவன், மனைவி போல குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதுதெரிந்து அதிர்ச்சியடைந்த பிரதீப்பின் பெற்றோர், அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். தனக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பது குறித்து, பிரமிளாவிடம் பிரதீப் தெரிவித்துள்ளார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன்னை விட்டு பிரியக் கூடாது என்றும், திருமணம் செய்யக்கூடாது என்றும் பிரதீப்புடன் தகராறு செய்தார்.
இதனால், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பிரமிளா கத்தியால் பிரதீப்பை சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரதீப்பை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்து பிரமிளாவை கைது செய்தனர்.