Asianet News TamilAsianet News Tamil

அவன் படிப்புதான் 8ம் வகுப்பு! பண்ற வேலையெல்லாம் வேற லெவல்! பள்ளி மாணவனுடன் எஸ்கேப்பான ஆன்ட்டி பகீர்.!

8ம் வகுப்பு படித்து வந்த மாணவனுடன் எதிர்வீட்டை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண் கணவனை விட்டு மாணவனுடன் எஸ்கேப்பான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

illegal love affairs... married girl running with a school boy
Author
Andhra Pradesh, First Published Jul 28, 2022, 12:10 PM IST

8ம் வகுப்பு படித்து வந்த மாணவனுடன் எதிர்வீட்டை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண் கணவனை விட்டு மாணவனுடன் எஸ்கேப்பான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் இருக்கும் குட்மென் பேட்டையைச் சேர்ந்தவர் ஷப்னா(28).  இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. ஷப்னாவின் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  இந்நிலையில், எதிர் வீட்டில் இருக்கும் 8ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவனுடன் சப்னாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும்  தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க;- முதல் இரவுக்கு சென்ற புதுமணப்பெண்.. மிருகத்தனமாக நடந்து கொண்டதால் கம்பி எண்ணும் கணவர்..!

கடந்த 19ம் தேதி திடீரென்று தனது 2 குழந்தைகள் மற்றும் கணவரை தவிக்கவிட்டு ஷப்னா வீட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து, குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே, எதிர்வீட்டை சேர்ந்த பள்ளி மாணவனும் காணாமல் போனது தெரியவந்தது. இருவரும் ஒரே சமயத்தில் காணாமல் போனதை அடுத்து இருவரும் ஜோடியாக வெளியேறியது தெரியவந்தது. இது தொடர்பாக பள்ளி மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஷப்னாவும்,  மாணவன் சானுவும் காணாமல் போனதிலிருந்து அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.,

இதையும் படிங்க;- வாயில் சரக்கை ஊற்றி நர்ஸை புதரில் வைத்து நாசம் செய்த கொடூரன்கள்.. தாயிடம் சொல்லி கதறிய மகள்..!

இதனையடுத்து, அவரது, செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். இறுதியாக அவர்கள் ஐதராபாத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அங்கு சென்ற போலீசார் இருவரையும் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து, ஸ்வப்னாவிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அந்த பள்ளி மாணவனுடன் சில நாட்களாக உடல் ரீதியிலான உறவில் இருந்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் ஸ்வப்னா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

இதையும் படிங்க;-  ஃபுல் மப்பில் வந்து நைட்டில ஓயாத டார்ச்சர்.. வலி தாங்க முடியாததால் கணவரின் தலையில் அம்மிக்கல்லைப்போட்ட மனைவி

Follow Us:
Download App:
  • android
  • ios